Saturday, July 21, 2012

TNTJ தபூக் கிளையில் இப்தார் மற்றும் பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 20/07/2012 வெள்ளி அன்று ரமளான்–1 முதல் நாள் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று, அழகிய முறையில் உபசரித்து உபகாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், மேலும் கிளைச் செயலாளர் சகோ, நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் சுற்றுபுற பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

 

No comments:

Post a Comment