Friday, May 31, 2013

வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகள்

வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகள்

கோடை காலம் போல வெயில் கொளுத்துகிறது. வீட்டிற்குள்ளேயே அனல் அடிக்கிறது. இதற்கிடையே மின் தட்டுப்பாடு வேறு மக்களை படுத்தி எடுக்கிறது. எனவே வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகளை கூறுகின்றனர் உள் அலங்கார நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
குளிர்காலத்தில் ஜன்னலை அடைத்து வைத்திருக்க வேண்டிய சூழல் இருந்திருக்கும். கோடையில் வீட்டிற்குள் காற்று நன்றாக வர ஜன்னல்கள்வீட்டு வாயில்களை அடைத்துக் கொண்டிருந்த பொருட்களை அகற்றுங்கள். ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் ஒட்டடைதூசுகளை சுத்தமாக துடைத்து விடுங்கள். சுத்தமான காற்று அதிகமாக வருவதற்கு வசதியாக இருக்கும்.
கோடைகாலத்தில் ஜன்னல் திரைச்சீலைக்களை தண்ணீரில் நனைத்துப்போடுங்கள். அதேபோல் பால்கனியில் துணியை தொங்கவிட்டு அதை மணிக்கு ஒருமுறை ஈரமாக்க வேண்டும். இதனால்வீட்டுக்குள் வரும் அனல் காற்று ஈரத் துணிகள் மூலம் குளிர்ச்சியாக மாறி விடும். தரையிலும் அவ்வப்போது ஈரத் துணியால் துடைக்கலாம். பால்கனிஜன்னல்களுக்கு வெட்டி வேரில் கிடைக்கும் பாயை தொங்க விட்டு அதை நனைத்தும் குளிர்ச்சியை பெறலாம்.
மின் விசிறிகள் அழுக்கேறி இருந்தால் காற்று குறைந்து விடும். எனவேவாரம் ஒருமுறை மின் விசிறி இறக்கைகளை துடைத்து பராமரித்தால் அதிக காற்று கிடைக்கும். இது பவர் கட் காலம். எப்பொழுது கரண்ட் போகும் என்று கூற முடியாது. எனவே அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் கைமேல் பலனாக உதவுவது ஓலை விசிறிகளே. எனவேகோடையில் இவற்றை பத்திரப்படுத்தி வையுங்கள். பனை ஓலை விசிறியை எளிதில் கிடைக்கும் இடத்தில் எடுத்து வையுங்கள். அத்துடன் அவற்றை பக்கெட் நீரில் ஒரு மணி நேரம் நனைத்து வைத்து விட்டு பயன்படுத்திப் பாருங்கள். இயற்கை ஏசியாக காற்று வரும்.
வீட்டு மொட்டை மாடியில் வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம். அதேபோல் கிழக்குமேற்கு பக்க ஜன்னல்களில் கண்ணாடிகள் இருந்தால் சன் கிளாஸ் ஒட்டலாம். வீட்டைச் சுற்றிலும் செடிகளை வளர்க்கலாம். வீட்டிற்குள் செடிகள் வளர்ப்பதால் பசுமையால் குளிர்ச்சி ஏற்படும்.

சிசேரியன் பிரசவத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?

சிசேரியன் பிரசவத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?


கடந்த ஐந்து ஆண்டுகளை விட தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்கிறது ஒரு புள்ளிவிபரம். இதற்குக் காரணம் சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் தீவிரமடைந்து வருவதே காரணம்.
பிரசவ வலி என்பது ஒவ்வொரு பெண்ணும் உணரவேண்டிய ஒன்று. இது பெண்ணிற்கு ஏற்படும் உச்சக்கட்டவலி. மாதவிடாய் காலத்தில் வலிப்பதைப் போல இல்லாமல் அதீத வலியுடன் உயிர்போய் உயிர் வரும். அதனால்தான் பிரசவத்தை மறுஜென்மம் என்கின்றனர். இந்த வலிகளை பொறுக்க முடியாமல் அஞ்சியே பெரும்பாலான பெண்கள் சிசேரியன் பிரசவத்தை பிரும்புகின்றனர்.
பிரசவவலி என்பது அதிகபட்சம் 12 மணிநேரம் தான், அதனை பொறுத்துக்கொண்டால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாய் நடமாடலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் அதற்கான பின் விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சிசேரியன் பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து அதை சட்டியில் வறுத்து வெடிக்கும் போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடிக்கலாம் இது கால் வீக்கத்தை குறைக்கும்.
கர்பினிகள் தங்கள் கர்ப்பகாலத்தில் உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது. முக்கியமாக வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தையக்கஞ்சி சாப்பிடுவது சுகப்பிரசவத்திற்கு வலி வகுக்கும். 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீர் எடுத்து அதில் சிறிதளவு வெண்ணெய் கலந்து மதியம் நேரத்தில் சாப்பிடலாம். கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரைக்கும் சின்னவெங்காயம், சீரகம் சேர்த்து முருங்கைக் கீரை சூப் வைத்து சாப்பிடலாம் இதனால் பிரசவம் சுலபமாகும்.
பிரசவ நாள் நெருங்கும் சமயத்தில் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அப்பொழுது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த கசாயம் வைத்து சாப்பிடலாம். சாதாரண வலி என்றால் நின்றுவிடும். அதே பிரசவ வலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு என்கின்றனர் நிபுணர்கள்.

சாதிக்க வேண்டியது அவசியம்.


சாதிக்க வேண்டியது அவசியம்.


சமுதாய சிக்கல்களை தீர்க்கக் கூடிய புதிய தொழில்நுட்பங்களைஇன்ஜினியர்கள் உருவாக்க வேண்டும். மருத்துவம்எரிசக்திநவீன கம்ப்யூட்டர்கள்தொலைதொடர்பு போன்ற துறைகளின் முன்னேற்றத்தை ஏற்படுத்த,இன்ஜினியரிங் அவசியம்.
மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உள்கட்டமைப்பு,சுற்றுச்சூழல்நீர்வளம்வீட்டுவசதிசுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த தேவைகளைஇன்ஜினியரிங் துறையின் உதவியுடன் தான் சமாளிக்க முடியும்.
பயோடெக்னாலஜிநானோடெக்னாலஜிஇன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜிமெட்டீரியல் சயின்ஸ்,போட்டோனிக்ஸ் போன்ற துறைகள் எதிர்காலத்தில் வளர்ச்சியை சந்திக்கும் என நம்பப்படுகிறது.
காயமடைந்தபாதிப்படைந்து உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை இல்லாமல்நரம்புகளையும்திசுக்களையும் சீராக்குவதன் குணப்படுத்த பயோடெக்னாலஜி ஆய்வுகள் நடந்து வருகின்றன. பயோடெக்னாலஜி தொழில்நுட்பத்துக்கும் இன்ஜினியரிங் அறிவு அவசியம்.
நானோ சயின்ஸ்நானோ இன்ஜினியரிங் ஆய்வுகள் பயோ இன்ஜினியரிங்மெட்டீரியல் சயின்ஸ்எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளுக்கும் நமக்கு உதவுகின்றன.
செயற்கை உறுப்புகளை தயாரிக்கவும்சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தவும் நானோபொருட்கள் உதவுகின்றன.
பொருளின் அளவை குறைக்கவும்அதன் திறனை மேம்படுத்தவும் போட்டோனிக்ஸ் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.
இயற்கை பேரிடர்களை முன் கூட்டியே அறியும் வகையிலான பொருட்களை உருவாக்குவது பற்றிமெட்டீரியல் சயின்ஸ் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இன்ஜினியர்கள்தொழில்நுட்பபொருளாதாரசமூகஅரசியல் ரீதியான வரையறைக்குள் செயல்பட்டுசாதிக்க வேண்டியது அவசியம்.






Thursday, May 30, 2013

ஜும்ஆ

அஸ்ஸலாமு அலைக்கும் 
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு .......

881. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :11



883. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன."
என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :11



934. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் 'வாய்மூடு!' என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :11



935. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது 'ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். 'அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள்.
(புஹாரி
 

Wednesday, May 29, 2013

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய 5 இலங்கை சகோதரிகள்!...

அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.!!!! அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!                        
 TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 29/05/2013 ன்று   தபூக் King Fahad Hospitalலில் {ஜனிட்டராக} பணிபுரியும் இலங்கை-  ந்து மதத்தைச்சேர்ந்த 2 தமிழ் சகோதரிகளும், புத்த மதத்தைச்சேர்ந்த 3 சிங்கல சகோதரிகளும்: ஆகமொத்தம் 5 சகோதரிகள்! சத்திய மார்க்கம்! இஸ்லாத்தை தங்களது வாழ்கை நேறியாக ஏற்றுக்கொண்டார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்….!!
இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அவர்களின் பெயர்களின் விபரம் வருமாறு :-
1- இலங்கை - அனுராதபுர         R. M. லலிதா திஷ்சநாயக்கு.
2- இலங்கை - அன்கோட           S. நிரோஷிக்கா.
3- இலங்கை  காலி - ஹிக்குல்     D. M. சுஹிவா.
4- இலங்கை – திருக்கோணமலை J. சர்மிலா தேவி.
5- இலங்கை – அனுராதபுர                 N. ரஜேஷ்வரி.
ஆகிய 5 சகோதரிகளுக்கும் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் : இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக்கூறியதுடன் {ஸஹாதா} கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.                
மேலும் அவர்கள் தங்களது பெயர்களை :-
1- R. M. லலிதா திஷ்சநாயக்கு – சல்மா!...
2- S. நிரோஷிக்கா – ஆய்ஷா!...
3- D. M. சுஹிவா – பாத்திமா!...
4- J. சர்மிலா தேவி – அஷ்மா!...
5- N. ரஜேஷ்வரி – அமல்!...
என்றும் மாற்றிக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்….!!
தமிழிளிருந்து சிங்கலத்திற்கு மொழிபெயர்ப்பாளராக உதவிபுரிந்தவர் – இலங்கை – கொழும்பைச் சேர்ந்த சகோ, முஹம்மது ஆஷர் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!...
மேலும் அவர்களுக்கு சகோ, PJ அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், நபிவழித் தொழுகை மற்றும் பல முக்கிய இஸ்லாமிய 10 நுல்களையும்.
மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள், ஏகத்துவமும் எதிர்வாதமும், ஈமானின் கிளைகள், இஸ்லாம் கூறும் குடும்பவியல்,! ஆகிய தலைப்புகளின் 25 DVD களும் வழங்கப்பட்டது!
மேலும் சிங்கல சகோதரிகளுக்கு சிங்கல மொழியில் திருக்குர்ஆன் மற்றும் முக்கிய நூல்களும், ஆடியோ கேஸட்களும் வழங்கப்பட்டது!
அல்ஹம்துலில்லாஹ்….!!
---------------------------------------------
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளேவல்ல இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்இவர்களுக்காக துஆச் செய்யுங்கள்!!
==================================================================================================
"அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழையும் போது உமது இறைவனை போற்றி, துதிப்பீராக!, 
பாவமன்னிப்பு தேடுவீராக"!! [உலகப் பொதுமறை திருக்குர்ஆன் 110:2,3]
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அல்லாஹ் ஒருவனுக்கு நேர்வழிகாட்ட நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். (திருக்குர்ஆன்: 6:125)


சகோதரர் ரோஹித்குமார் சங்கர்!... போட்டோக்கள்


TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 28/05/2013 ன்று அல் அர்ஜான்கம்பனியில் ஓட்டுனராக பணிபுரியும் இந்து மதத்தைச் சேர்ந்த, உத்திரபிரதேஷ் – பைசாபாத் சகோதரர் ரோஹித்குமார் சங்கர்! அவர்கள் சத்திய மார்க்கம்! இஸ்லாத்தை தனது வாழ்கைநேறியாக ஏற்றுக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்….!!
அவருக்கு சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் {ஹிந்திமொழியில்இஸ்லாத்தின் கொள்கைவிளக்கம்!, வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாதாகலீமாவையும்சொல்லிக் கொடுத்தார்.                
மேலும் அவர் தனது பெயரை அப்துல் மாலிக்! என்றும் மாற்றிக்கொண்டார்.
மேலும் அவருக்கு ஹிந்தி மொழியிலான திருக்குர்ஆன் மற்றும் முக்கிய நூல்களையும், ஆடியோ கேஸட்களும் வழங்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ் இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!




Tuesday, May 28, 2013

ஜித்தா-ஷரஃபியா கிளை வாராந்திர பயான்



அல்லாஹ்வின் பேரருளால், 24/05/2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் மண்டல 
தாயி சகொ. ஹக் முஹையதீன் அவர்கள், "விடை பெரும் நேரம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் து/ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம்


TNTJ ஜித்தா-ஷர்ஃபி யா கிளையில் பேச் சு பயிற்ச்சி


 TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளையில் பேச்சு பயிற்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் 24-05-2013 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் பேச்சு பயிற்ச்சி வகுப்பு மண்டல து. தலைவர் சகோ. ரஃபீ அவர்களால் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள கொள்கை சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் பயிற்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம்.



Friday, May 24, 2013

மகளிர்க்காக! ஜித்தாவில் கேள்வி பதில் நிகழ்ச்சி!!

மகளிர்க்காக! ஜித்தாவில் கேள்வி பதில்  நிகழ்ச்சி!!

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல சாகர் கிளையில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி 06-05-2013 அன்று நடைபெற்றது. 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான், சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களுக்கு பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.


செனையா கிளை - மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


   அஸ்ஸலாமு அலைக்கும்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளை சார்பாக 04/05/2013- சனிகிழமை அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது,
இதில்  தாயகத்திலிருந்து வருகை தந்த மேலாண்மை குழு உறுப்பினர் சகோ: M.S..சுலைமான் அவர்கள்
"நவீன கலாச்சாரமும் இன்றைய சமுதாயமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார் ..
இந்த நிகழ்ச்சியில் 80கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர் ..
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, May 14, 2013

துஆ மட்டும் போதும்

துஆ மட்டும் போதும் அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக் கூறினார்கள். என் மீது அன்பு வைத்திருந்த கொள்கைச் சகோதாரர்கள் மட்டுமின்றி கொள்கையில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட முறையில் என்மீது மதிப்பு வைத்திருந்த சகோதரர்களும் ஆங்கில மருத்துவம் தான் சரியானது எனவும் வலியுறுத்தினார்கள். அமெரிக்கா போகலாம். லண்டன் போகலாம். சிங்கப்பூர் போகலாம் எல்லா செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பல சகோதரர்கள் முன்வந்தனர். ஏழை எளிய மக்கள் கூட எனது நிலத்தை விற்றுத் தருகிறேன்; நகையை அனுப்புகிறேன் என்றெல்லாம் எனக்கு உறுதுணையாக நின்றார்கள். என் உறவினர்களில் எவ்வளவு செய்வதற்கு தகுதிபடைத்தவர்கள் உள்ளனர். மனமகிழ்வோடு செலவு செய்ய அவர்கள் தாயாராக இருந்தனர். அவர்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது என்றாலும் அந்த உதவிகளை நான் கன்னியமான முறையில் மறுத்து விட்டேன். எனது மருத்துவ வகைக்காக பணமாகவோ பொருளாகவோ எந்த உதவியும் யாரிடமும் நான் பெறவில்லை. அதை நான் விரும்பவில்லை. அறுவை சிகிச்சை செய்வதற்கு நான் உடன்படாததற்கு இரணடு காரணங்கள் இருந்தன. எனது குடும்பத்தில் சிலருக்கு கேன்சர் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் அதிகமாகப் பரவி அவர்கள் மரணித்ததைக் கண்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம் ஒரு காரணம். அறுவை சிகிச்சை என்றால் அதைப் பலரும் அறியும் நிலை ஏற்பட்டு எனக்கு உதவ முன்வருவார்கள்., என்னைக் கேட்காமலே எனக்கு உதவுவார்கள். அடிக்கடி நோய் விசாரிப்பார்கள். மருத்துவமனையில் அத்கிமானோர் குழுமி நோயையும் ஒரு பந்தாவாகக் காட்டும் நிலை ஏற்படும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பதும் கூடுதல் காரணம். எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போம் என்று மாற்று மருத்துவ முறைகளைப் பல மாதங்கள் கடைப்பிடித்து வந்தேன். ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதுடன் கேன்சர்கட்டியின் அளவு தாறுமாறாக அதிகரித்தும் வந்தது. விசாரிப்பவர்களிடம் நன்றாக உள்ளது என்று சொல்லி அவர்கள் எனக்காக கவலைப்படுவதைத் தவிர்த்து வ்ந்தேன். ஆனால் அதன் பாதிப்புகள் அதிகரித்து வருவதை உண்ர்ந்த போது எனக்கு ஏற்பட்டுள்ள வகை கேன்சருக்கு மாற்று மருத்துவம் இல்லை என்று எனக்கு தாமதமாகத் தோன்றியது. எனவே அறுவை சிகிச்சை செய்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் இதை ஒருவருக்கும் சொல்லாமல் செய்தால் தான் மேலே சொன்ன விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று கருதி என் மனைவி என் கடைசி மைத்துனன் தவிர யாருக்கும் சொல்லாமல் பிரபலமில்லாத ஒரு மருத்துவமனையில பிரபலமான டாக்டர் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்காக அட்மிட் ஆனேன். ராஜபாளயம் நிகழ்ச்சியை நேற்று முடித்து விட்டு புறப்பட்டு இன்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஆப்ரேஷன் செய்து கொண்டேன். காலை 11.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை நான்கு மணி நேரம் ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. அல்ஹ்மது லில்லாஹ். மாநில நிர்வாகிகளுக்கோ, உறவினர்களுக்கோ, வேறு நண்பர்களுக்கோ இதை நான் தெரிவிக்கவில்லை. என்னைப் பார்க்க வருவதற்காக அவர்கள் செலவு செய்து வருவதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை நான் அறிவேன் மேலும் மருத்துவ மனையில் கூட்டமாக குழுமி அது ஒரு செய்தியாகவும் பரபரப்பாகவும் ஆகிவிடக் கூடாது என்பதாலும். ஒருவருக்கும் சொல்லவில்லை ஆபரேஷன் முடிந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் தான் மாநில நிர்வாகிகளுக்கும் உறவினர்களுக்கும் நல்லபடியாக சிகிச்சை முடிந்ததைத் தெரிவித்தேன். துன்பம் நேரும் போது மற்றவர்களின் ஆறுதலை அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இயல்பாகவே எனக்கு துன்பங்கள் நேரும் போது யாரும் அனுதாபம் காட்டினால் அது குறித்து அக்கறை காட்டினால் அது எனக்கு ஆறுதலைத் தருவதற்கு பதிலாக சங்கடத்தையே ஏற்படுத்துகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே நான் இது போன்ற விசாரணைகளை விரும்புவதில்லை. எது நடந்தாலும் நானே இலேசாக எடுத்துக் கொள்ளும் போது ஆளாளுக்கு ஏன் பயம் காட்டுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. எனவே தான் நான் ஒருவருக்கும் சொல்லாமல் என் சொந்தச் செலவில் யாருடைய உதவியையும் தயவையும் நாடாமல் நானே அல்லாஹ்வின் அருளால் என் பிரச்சனைக்கு என்னால் இயன்ற தீர்வைக் கண்டுள்ளேன். ஆப்ரேஷன் முடிந்து நான் மனஉறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். இதனால் தான்  நானே உட்கார்ந்து இதை கம்போஸ் செய்து நானே இணைய தளத்தில் ஏற்ற முடிந்தது. இதை நான் அனைவருக்கும் தெரிவிக்கக் காரணம் மாநில நிர்வாகிகளிடமும் என் குடும்பத்தாரிடமும் ஏன் ஒருவருக்கும் சொல்லவில்லை என்று யாரும் கேட்டு அவர்களைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பது தான். அவர்களுக்கே நான் சொல்லாத போது அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தெரிவிப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆங்கில மருத்துவர்கள் இதன் மூலம் பூரண குணமடைய 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் மனிதர்கள் தான். அவர்கள் கூறுவது போல் குணமடைய உங்கள் அனைவரின் துஆ மட்டும் போதும். நான் வேண்டுவது உங்கள் துஆவை மட்டும் தான்
 அன்புடன் பீ.ஜைனுல் ஆபிதீன்

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/vimarsanangal/pj_patriya_vimarsanam/dua_mattum_pothum/
Copyright © www.onlinepj.com