Monday, July 2, 2012

ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் 29/06/2012 அன்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கடையநல்லூர் கிளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில தலைமையின் செயற்குழு நடந்த விபரம் சகோ.ஹலீம் சி்த்தீக் படித்துக் காட்டினார். நோன்புக்கஞ்சி ஒரு கஞ்சிக்கு 180 ரியால் நிர்ணயிக்கப்பட்டது. நோன்புப் பெருநாள் இரண்டாம் நாள் பொதுக்குழு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. மருத்துவஉதவி கேட்டு கடிதம் தந்த வகைக்கு 12000 ரூபாய் டவுண் கிளைக்கு அனுப்பி கொடுத்த விபரம் அறிவிக்கப் பட்டது. ஆலோசகர்கள் அனைவரும் கலந்து கருத்துக்களை தெரிவித்தனர். துஆவுடன் நிறைவுற்றது.