Monday, April 29, 2013

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி? நாம் அறிய வேண்டிய தகவல் !!



உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.

கிட்னி ஸ்டோன்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு.

பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.

சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன.

சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத்

தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும்.

கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம்,

மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. 

தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.



Saturday, April 27, 2013

செனைய கிளையின் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் செனைய கிளையின் ஆலோசனை
கூட்டம் (26/04/2013- வெள்ளிகிழமை ) அல்-போசான் கேம்பில் நடைபெற்றது .

கிளை தலைவர் சகோ: அப்துல் ஹக்கீம் தலைமையில் மற்றும் கிளை செயலாளர்
சகோ:யாகூப் முன்னிலையிலும் கூட்டம் ஆரம்பமானது,.

கிளை து.தலைவர் சகோ: அப்துல் அஜீஸ் அவர்கள் "சுயபரிசோதனை" என்ற தலைப்பில்
உரையாற்றினார் ..

இக்கூட்டத்தில் "இஸ்திர நிகழ்ச்சி மற்றும் மதீனா பயணம்" குறித்து
ஆலோசிக்கப்பட்டது .

இக்கூட்டத்திற்கு மண்டல செயலாளர் சகோ: அப்துல் பாரி மற்றும் து.செயலாளர்
சகோ: நசுருதீன் அவர்களும் செனைய கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள் &
ஆலோசகர்கள் உட்பட 15கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் .

இறுதியாக துவா ஓதிய பிறகு கூட்டம் நிறைவுபெற்றது ..

அல்ஹம்துலில்லாஹ்...

Friday, April 26, 2013

40நாட்களில் 15பேர் இஸ்லாத்தை ஏற்றனர்!

ஏற்றம் பெறும் தபூக் கிளையின் பிறமத அழைப்புப்பணி : 40நாட்களில் 15பேர் இஸ்லாத்தை ஏற்றனர்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, April 23, 2013, 11:24

ரக்கீப்போ ராமூஸ் - அப்துர்ரஹ்மான் ஆக

சிங்கள சகோதரர் மலிந்த - நூஹ் ஆக....

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏழு கிறித்தவ சகோதரர்கள் கூட்டாக இஸ்லாத்தை ஏற்கும் காட்சி

மாரா கென்னத் - அப்துல் மாலிக் ஆக, அமர் கார்பியோ - அப்துல்லாஹ்வாக....

மூன்று இலங்கை சகோதரிகள் இஸ்லாத்தை தழுவிய போது...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலக் கிளையான தபூக் கிளை பிறமத அழைப்புப்பணியில் முத்திரை பதித்து வரும் செய்திகளை தொடர்ச்சியாக உணர்வு இதழில் வெளியிட்டு வருகின்றோம்.

அந்த வரிசையில் கடந்த 40 நாட்களில் மட்டும் உலகின் பல பகுதிகளிலிருந்து தபூக்கில் பணியாற்ற வந்த பிறமத சகோதர, சகோதரிகள் 15 பேர் தபூக் கிளை மூலமாக இஸ்லாத்தை தழுவியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்…..

தபூக் கிளை மூலமாக பிலிப்பைன்ஸ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் தாவா செய்வது பல மொழிகள் பேசக்கூடிய சகோதர, சகோதரிகள் தபூக் கிளை வாயிலாக இஸ்லாத்தை ஏற்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவியவர்கள் குறித்த விபரம் பின்வருமாறு :

இஸ்லாத்தை ஏற்ற 7 பிலிப்பைன்ஸ் சகோதரர்கள் :

கடந்த 14/03/2013 வெள்ளியன்று தபூக் செனய்யா இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் பணிபுரியும் ஏழு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்.

அவர்களின் பெயர்களின் விபரம் வருமாறு:-

1- பிலிப்பைன்ஸ் – மனிலாவைச்சேர்ந்த

- அமிர்ஜோன் மக்கபகல் – அப்துல்லாஹ்வாகவும்,

2- பிலிப்பைன்ஸ் – மனிலாவைச்சேர்ந்த – கார்ல்வின்ஷன் – காலித் ஆகவும்,

3- பிலிப்பைன்ஸ் – செபூவைச்சேர்ந்த – கோக்கொ

மார்ட்டின் – உமர் ஆகவும்,

4- பிலிப்பைன்ஸ் – தாவாவ்வைச்சேர்ந்த – ஜோன் அல்டிரின் – யஹ்யாவாகவும்,

5- பிலிப்பைன்ஸ் – மிந்தநாவ்வைச்சேர்ந்த – மைக்கல் பிலிப் – முஹம்மது ஆகவும்,

6- பிலிப்பைன்ஸ் – சாந்தாகுருஷ்வைச்சேர்ந்த – அர்லியானோ – ஜஃபர் ஆகவும்,

7- பிலிப்பைன்ஸ் – கண்டோன்வைச் சேர்ந்த – பிரையன் ஜோன் – அய்யூப் ஆகவும் மாறி தங்களை தூய இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்டனர்.

மேற்கண்ட ஏழு பிலிப்பைன்ஸ் சகோதரர்களும் கிறித்தவ மதத்தைச்சேர்ந்த, தக்காலோக் மொழிபேசும் சகோதரர்களாவர். இவர்கள் அனைவருக்கும் தபூக் கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்களும், சகோ. அஹமது இஷ்புனுஷா (பிலிப்பைன் மொழி பேசக்கூடியவர்)அவர்களும் அவர்களுடைய(தக்காலோக்) மொழியிலும், ஆங்கில மொழியிலும் இஸ்லாத்தின் கொள்கை

விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறி ஏகத்துவ கலிமாவைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

அதுபோல கடந்த 19/04/2013 தபூக் கிங் ஃபஹத் ஹாஸ்பிடல் மெடிக்கலில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் – மனிலாவைச் சேர்ந்த

சகோதரர் ஜோவெல் ரக்கீப்போ ராமூஸ் (JOEL RAQUIPO RAMOS) அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அப்துர்ரஹ்மான் என்று அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். தக்காலோக் மொழி பேசும் அவருக்கு ஆங்கிலம், தக்காலோக் மொழிகளில் திருக்குர்ஆன் மற்றும் முக்கிய நூல்கள், ஆடியோ கேஸட்டுகளும்

வழங்கப்பட்டன.

இஸ்லாத்தை ஏற்ற கென்யா நாட்டு சகோதரர் :

கடந்த 25-03-2013 அன்று தபூக் கிங் அப்துல் அஜீஸ் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கென்யா நாட்டின் நைரோபியைச்சேர்ந்த சகோதரர். மாரா கெனீத் நோரே (Maara Kenneth Njorge) அவர்களும், பிலிப்பைன்ஸ் நாட்டின் சாந்தாகுருஷை சேர்ந்த சகோதரர் அமர் கார்பியோ சலாலோ (Amar Carpio Sallao) அவர்களும் தூய இஸ்லாத்தை தழுவினார்கள்.

கடந்த 20-03-2013 புதன் சென்னையைச் சேர்ந்த சகோ. முத்து அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார்கள். அவருக்கும் பீஜே அவர்கள் மொழிபெயர்த்த தமிழ் குர்ஆன், மற்றும் 15 மார்க்க புத்தகங்கள், 25 டி.வி.டிக்கள் வழங்கப்பட்டன.

இஸ்லாத்தை ஏற்ற இலங்கை சகோதர, சகோதரிகள் :

தபூக் அல்-ஜஸீரா ஹோட்டலில் பணிபுரியும் இலங்கை அனுராதபுரத்தை சேர்ந்த, புத்த மத சகோதரர் மலிந்த, தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு தபூக் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இலங்கை சகோதரர் முஹம்மது அஷீர் அவர்கள் சிங்களத்தில் கலிமா சொல்லிக் கொடுத்தார். அவர் தனது பெயரை நூஹ் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு சிங்கள குர்ஆன், மற்றும் புத்தகங்கள், ஆடியோ கேஸட்டுகள் வழங்கப்பட்டன.

கடந்த 14-03-2013 அன்று தபூக் பிரசவ மருத்துவமனையில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் மணிலாவை சேர்ந்த சகோதரி எமிலியும், இலங்கை கன்தலாவைச் பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி சந்திரிக்கா சமந்தி பிரேராவும், இலங்கை நெக்கம்போவை பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி அனோமா தில்ஹனி சில்வவும், தூய இஸ்லாத்தை தழுவினார்கள். அவர்களுக்கு தபூக் கிளை தலைவர் அஜிஸும் அவரது துணைவியார் சுமையாஹ்வும், தூய இஸ்லாத்தை விளக்கி கலிமா சொல்லிக்கொடுத்தனர். அவர்களில் எமிலி,-அமல் என்றும், சந்திரிக்கா – சமீரா என்றும், அனோமா – ஈமான் என்றும் தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டனர்.

இவ்வாறாக தபூக் கிளையின் பிறமத அழைப்புப்பணி களை கட்டி வருகின்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!

Thursday, April 25, 2013

மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும்,


அஸ்ஸலாமு அலைக்கும்,,,,
கடந்த ஆண்டு நிலை: கடந்த ஆண்டு, பொதுக் கல்வி பிரிவில், 1.74 லட்சம் விண்ணப்பங்கள், தொழிற்கல்வி பிரிவில், 6,000 விண்ணப்பங்கள் என, 1.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. "நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேற்று மாலை, தெரிவித்தார். இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ், 1.75 லட்சம் இடங்கள் இருந்தன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள், கடைசி வரை நிரம்பவில்லை. இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 2 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, அதிக மாணவ, மாணவியர் விண்ணப்பிப்பர் என, அண்ணாபல்கலை எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டுள்ளது.
"ஆன்-லைன்' விண்ணப்பமும் ஏற்பு:
விண்ணப்பத்தில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை பதிய வேண்டும். மே, 10ம் தேதிக்குள், தேர்வு முடிவு வெளியாகி விட்டால், அடுத்த, 10 நாட்களுக்குள், மாணவர்கள், விண்ணப்பங்களை அனுப்பி விடலாம். "ஆன்-லைன்' வழியாகவும், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த முழுமையான விவரங்கள், மே, 3ம் தேதி வெளியாகும் அறிவிப்பில் பார்த்து, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 21ம் முதல் கலந்தாய்வு: பொறியியல் சேர்க்கை தொடர்பான முழு அட்டவணையை, பொறியியல் சேர்க்கை செயலர், ரெய்மண்ட் உதிரியராஜ், நேற்றிரவு வெளியிட்டார். அதன் விவரம்:
*
விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13
*
விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13
*
விண்ணப்பம் வழங்க, கடைசி நாள் 20.5.13
*
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 20.5.13
* "
ரேண்டம்' எண் வெளியீடு 5.6.13
* "
ரேங்க்' பட்டியல் வெளியிடும் தேதி 12.6.13
*
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும் நாள் 21.6.13
*
கலந்தாய்வு முடியும் நாள் 30.7.13
இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும்www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

 அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கி இருப்பான்.மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகிறான்.தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான்.நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிக்கபடுவீர்கள்.
அல் குர்ஆன்.16:93




Wednesday, April 24, 2013

Madina Payanam Notice

செனையா கிளை - பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளை சார்பாக
(23/04/2013-செவ்வாய் கிழமை ) அன்று AGM- கேம்பில் பயான் ஏற்பாடு
செய்யப்பட்டது ..
இதில் சகோ: ரபீக் அவர்கள் "மறுமையை நினைவு கூறுவோம் " என்ற தலைப்பில்
உரையாற்றினார் ..
இந்நிகழ்ச்சியில் 25கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர் ..
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் "தொழுகையில் ஓத வேண்டிய
துவாக்கள் " என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது ...
அல்ஹம்துலில்லாஹ்...

டிஜிபி அலுவலகம் முற்றுகை - நாள் : 27-04-13

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, April 23, 2013,
தலைமைகழக செய்தி >> முக்கியச் செய்திகள்


கடையநல்லூரில் நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்களை கைது செய்து, பொய்
வழக்குப்போட்டு, தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தினுள் டிஎன்டிஜேயினர் நுழைய தடை
விதித்து அராஜகம் செய்து, எடுத்தேறி வந்து வன்முறையில் ஈடுபட்டு கொலை
வெறித்தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து,
ஒருபக்க சார்பாக நடந்து கொள்ளும் காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்து

சென்னையில்…

டிஜிபி அலுவலகம் முற்றுகை

நாள் : 27-04-13 இன்ஷா அல்லாஹ்
சனிக்கிழமை காலை 11மணிக்கு
அலைகடலென திரண்டு வாரீர்!
அழைக்கிறது.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


மர்கஸ் அமைவதைக் காரணம் காட்டி ஒன்றிணைந்த வன்முறையாளர்கள்:
கடையநல்லூரில் காவல்துறையினரின் பாரபட்சம்! »

Tuesday, April 23, 2013

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இலங்கை சகோதரர் - சமித் இந்துனில்!...


TNTJ ஜித்தாஹ்மண்டலம்"தபூக்"கிளையில்கடந்த18/04/2013 அன்றுTabuk -  S T C
கம்பனியில்
ஓட்டுனராக பணிபுரியும் புத்த மதத்தைச் சேர்ந்த, இலங்கை - மாத்தரயைச்சேர்ந்த
சகோதரர் சமித்இந்துனில்!அவர்கள் சத்திய
மார்க்கம்இஸ்லாத்தைதனதுவாழ்கைநேறியாகஏற்றுக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்….!!
சகோ, அப்துல்அஜீஸ்அவர்கள்: அவருக்குஇஸ்லாத்தின் கொள்கைவிளக்கம்,வணக்க
முறைகள்அனைத்தையும்விளக்கிக் கூறியதுடன் {ஸஹாதா}
கலீமாவையும்சொல்லிக்கொடுத்தார். மேலும்அவர்தனதுபெயரைஉமர்!என்றும்மாற்றிக்
கொண்டார்.
தமிழில்ளிருந்து
சிங்கலத்திற்கு மொழிபெயர்ப்பு உதவியாளராக இருந்தவர் - கொழூம்பைச் சேர்ந்த
சகோ, முஹம்மது அஷிர் அவர்கள்என்பது குறிப்பிடதக்கது.
மேலும் அவருக்கு சிங்கல மொழியிலான குர்ஆன் மற்றும்
முக்கிய நூல்களையும், ஆடியோ கேஸட்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்….!!

அன்புச்சகோதர,சகோதரிகளே! வல்லஇறைவனுக்குநன்றிசொல்லுங்கள்! இவருக்காகதுஆச்
செய்யுங்கள்!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம்
கூட்டமாக நுழையும் போது உமது இறைவனை போற்றி,துதிப்பீராக!,
பாவமன்னிப்பு தேடுவீராக"!![உலகப்பொதுமறைதிருக்குர்ஆன்–110:2,3]


TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!


அல்லாஹ்வின்பேரருளால் TNTJ
ஜித்தாஹ்மண்டலம்"தபூக்"கிளைமர்கஸில்19/04/2013வெள்ளியன்றுஜும்ஆவிற்குபிறகுவாராந்திரமார்க்கசொற்பொழிவுமிகச்சிறப்பாகநடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!...

இன்நிகழ்ச்சியில்சகோ, அப்துல்அஜீஸ் அவர்கள்"உலக வாழ்க்கை ஒரு
சோதனைக்களம்!..."என்றதலைப்பில் :பிறப்பு முதல் இறப்பு வரை, காலை முதல் மாலை வரை  அனைத்திலும் படைத்தவன் சோதிக்கின்றான்  என்பதை விளங்கி சோதனைகளை சாதனைகளக்குவோம் என்று அழகிய
முறையில் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

மேலும்சகோ,முஹம்மது ரபீக் அவர்கள் "ஜும்ஆவின்
ஒழுங்குகள்"என்றதலைப்பிலும் மிகச் சிறப்பாகசிற்றுரையாற்றினார்.
இன்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் உள்பட பலர்கலந்துக் கொண்டனர்.
இறுதியில் நபிவழிதுஆவுடன், மதிய
உணவிற்குபின்  நிகழ்ச்சிஇனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்….!!
நாங்கள் முஸ்லிம்கள்:

"எவர் அல்லாஹ்வின் பக்கம்  (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான  (நல்ல)
செயல்களை செய்து கொண்டு
நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக்கூறுகிறாரோ, அவரைவிட
அழகிய சொல் சொல்பவர்
யார்? (உலகப்பொதுமறை41:33)


Sunday, April 21, 2013

ஷரபியா - அரப்லங்கா உணவகத்தில் துஆ நோட்டிஸ்


அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டல ஷரபியா கிளைக்கு உட்பட்ட   அரப்லங்கா உணவகத்தில் 19-04-2013 வெள்ளி அன்று 'தொழுகையில் ஓதும் துஆக்கள்' மற்றும் 'துன்பங்களின்போது ஓதவேண்டிய துஆக்கள்' அடங்கிய துண்டு பிரசுரங்களை உணவாக மேலாளர் அம்ஜத் தன்னார்வத்துடன் பெற்று தனது வாடிக்கையாளர்களிடத்தில் விநியோகித்தார். அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.



ஷரபியா-நிகாத் கேம்பில் வாராந்திர பயான் & பயிற்சி





அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டல ஷரபியா கிளையின் சார்பாக 19-04-2013 வெள்ளி அன்று நிகாத் கேம்பில் வாரந்திர பயான் மற்றும் பேச்சாளர் பயிற்சி நிகழ்ச்சி மண்டல துணைத் தலைவர் ரபீக் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து வருகை புரிந்துள்ள பேச்சாளர் மேலப்பாளையம் ஹக் அவர்களின் உரை உறசாகமுடன் அமைந்தது. இறுதியாக மண்டல துணைத் தலைவர் ரபீக் "நபி (ஸல்) அவர்களின் இறுதி நேரம்" என்ற தலைப்பில் பேசினார். திரளான சகோதரர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி துஆவுடன் நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.


மாதாந்திர கூட்டம்!




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..,

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (19-04-2013) நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள்:

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை மர்கஸ்சிர்க்கு  பேட்டை ஜமாத், SDPI & த முமுக குண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட கொடுஞ்செயல் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

2. இந்த கொடுஞ்செயல் மூலம் நமது கொள்கை சகோதரர்கள் மற்றும் ஏராளமான அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களின் சிகிச்சைக்காக உடனடி பொருளாதார உதவி செய்வது மற்றும் ஏனைய உதவிகள் செய்வது பற்றியும் முடிவு எடுக்கப்பட்டது. 

பொறுப்பாளர்கள்,


தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ஜித்தா வாழ் கடையநல்லூர் கூட்டமைப்பு,

Thursday, April 18, 2013

செனைய்யா கிளை -கேம்ப் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்..

 17/04/2013- புதன் கிழமை அன்று  TNTJ - செனையா கிளையிலுள்ள ஆரிப்கோ கேம்ப்பில் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது .. இதில் சகோ:நசுருதீன் அவர்கள் "அல்லாஹ்வின் திருப்தியை பெறுவது எப்படி " என்ற தலைப்பில் உரையாற்றினார் .. 
10-கும் மேற்பட்ட சகோதரர்கள் இதில் கலந்துகொண்டனர் .. அல்ஹம்துலில்லாஹ் ....
செனைய்யா கிளை - ஜித்தா மண்டலம்

இந்திய தூதரகம்

 இந்திய தூதரகம் சில தகவல்களை மக்களுக்கு எடுத்துச்செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டது.
           
         
  1. சவூதி அரசாங்கம் அறிவித்துள்ள இந்த மூன்று மாத காலத்தை முறையாக பயன்படுத்திக்கொல்லும்படி கேட்டுக்கொண்டது.அம்நேசத்தியை 
  2. எதிர பார்த்துக்கொண்டுதான்  இருக்கிறோம்.இன்னும் அறிவிக்கப்படவில்லை.

  3. ஃப்ரீ விசாவில் உள்ளவர்கள் இந்த மூன்று மாதத்திற்குள், தான் வேலை செய்யும் நிறுவனத்தில் தனது கஃபாலத்தை மாற்றிக்கொள்ளுவதையோ, கஃபீலிடமே போய் வேலை செய்வதையோ அல்லது நாட்டிற்கு எக்ஸிட்தில் செல்வதையோ தவிர இந்த நாட்டு சட்டத்திற்கு புறம்பான ஆர்பாட்டம் எதிலும் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தத்தம் சமுக மக்களை அமைப்புகள் கேட்டுக் கொள்ளலாம் எனக் கோரப்பட்டது.

  4. நிதாகத் பிரச்சினையால் சிகப்பு நிற பிரிவில் உள்ள நிறுவனத்திலிருந்து பச்சை நிற நிறுவனங்களுக்கு மாறுவதற்கு பழைய கஃபீலிடமிருந்து கடவுச்சீட்டு (passport) கிடைப்பதில்லை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் முறையாக இந்திய தூதரகத்தை அணுகினால் அதனை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டது. (நிதாகத் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்க்கான தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்மந்தமாக  திரு.பத்ருத்தீன் - 0596810574 அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தூதரக வலை தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.)

  5. கஃபீளை விட்டு ஓடிவந்தவர்களுக்கு இதுவரை சவூதி அரசாங்கத்திடமிருந்து பொது மன்னிப்பு சம்மந்தமான இறுதி  அறிவிப்பு வரவில்லை என்பதால் தூதரகத்தில் பதிவு செய்துவரும் மக்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான குறிப்பிட்ட தேதி கூறமுடியாதா சூழ்நிலை உள்ளதாக விளக்கி கூறப்பட்டது.. இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்பட்டது.

  6. உம்ரா விசாவில் வந்து சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள், ஹுரூப், ஓடி வந்தவர்கள், ஃப்ரீ விசாவில் வந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாக இங்கு இருப்பதை விடுத்து நாட்டிற்கு செல்வதற்கு அவசரநிலை சான்றிதழ் (Emergency Certificate) பெற கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி இலவசமாக தரவிறக்கம் செய்துக்கொண்டு
    http://cgijeddah.mkcl.org/downloads/New%20emergency%20Form%202013.pdf
     பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இந்திய தூதரகத்திற்கு நேரில் வந்தோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என்று கூறப்பட்டது.. 
    (முகவரி : Labour Section, Consulate General of India, PO Box No. 952, Jeddah-21421. Address: Villa No. 34, behind National Commercial Bank, Near Al-Huda Mosque, Tahlia Street, Jeddah, Telephone: 02- 6603779; 02-2610189; Fax: 02-2840238)

Monday, April 15, 2013

TNTJ - JEDDAH சனாயியா கிளை(AGM கேம்ப்-ல்) மார்க்க சொற்பொழிவு


ஜித்தா - சனாயியா கிளை (AGM கேம்ப்-ல்) மார்க்க சொற்பொழிவு
அல்லாஹ்வின்  அருளால், தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல சனாயியா கிளை (AGM கேம்ப்-ல்) வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 10-04-2013 அன்று நடைபெற்றது. இதில் சகோதரர் நஸ்ருதீன் "தவ்பாவின் முக்கியத்துவம்" குறித்து உரையாற்றினார். திரளான கொள்கை சகோதரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ். 



Sunday, April 14, 2013

ஜித்தா - சனாயா கிளை (ஆரிப்கோ) கேம்பில் பயான் நிகழ்ச்சி.




ஜித்தா - சனாயா கிளை (ஆரிப்கோ) கேம்பில் பயான் நிகழ்ச்சி.

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டல சனாயா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி கிளை செயலாளர் அப்பாஸ் தலைமையில் ஆரிப்கோ கேம்பில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் . ஷௌகத் ஹுசைன் அவர்கள் "இதுதான் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். திரளான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். 


TNTJ ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளை வாராந்திர பயான்


அல்லாஹ்வின் பேரருளால், கடந்த  12/04/2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் மண்டல தாயி சகோ.. ஹபீபுர்ரஹ்மான் அவர்கள், "நபிவழி திக்ருகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் து/ஆ வுடன் பயான் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தா மண்டல நிர்வாகிகள்





நபிமொழி அறிவோம் - ஜித்தா-ஸாகர் கிளையில் குயிஸ் நிகழ்ச்சி



நபிமொழி அறிவோம் - ஜித்தா-ஸாகர் கிளையில் குயிஸ் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டல ஸாகர் கிளையின் வாரந்திர பயான் நிகழ்ச்சி 12-04-2013 வெள்ளி அன்று நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் முனாப் அவர்கள் வாரந்தோறும் நடைபெற்ற பயான்களிளிருந்து கேள்விகளை தொகுத்து குயிஸ் நிகழ்ச்சி நடத்தினார். நிகழ்ச்சி குறித்து அனைவரும் உற்சாகமுடன் கருத்து கூறினார். பல ஆண்டுகளாக அரபி குத்பாக்களையே கேட்டு  வெறுமையாக தெரிந்த வெள்ளிக்கிழமை இப்போது நபிமொழி அறிவோம் நிகழ்ச்சி மூலம் உயிர் பெற்றுள்ளதாக அப்பகுதி சகோதரர்கள் தெரிவித்தனர். ஸாகர் சகோதரர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சி துஆவுடன் நிறைவுற்றது. அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.



TNTJ - ஜித்தா மண்டல செயற்குழு கூட்டம்.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 11-4-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- ஜித்தா மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மண்டல மற்றும் கிளை செயல்பாடுகளை எவ்வாறு அதிகரிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. மேலும் கிளை செயல்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டது. இன்ன பிற நிர்வாக விசயங்கள் குறித்தும் கலந்தாலோசனை செய்யப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா.

மாநில துணை செயலாளர்கள்

துணை செயலாளர்களாக கீழக்கண்ட சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டுளனர். 

1. சகோ. எக்மோர் சாதிக் 
2. சகோ. ஆவடி அப்துல் ஜப்பார் 
3. சகோ. கோவை அப்துர் ரஹீம் 
4. சகோ. நெல்லை யூசுஃப் 
5. சகோ. ஆவடி இப்ராஹிம்
6. சகோ. மதுரவாயல் இ.முஹம்மது 
7. சகோ. திருவாரூர் அப்துர் ரஹ்மான் 
8. சகோ. வடசென்னை பதருல் ஆலம் 
9. சகோ. தொண்டி சிராஜ்
10.சகோ. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி 

அல்ஹம்துலில்லாஹ்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு இன்று (14-4-2013) கும்பகோணத்தில் கூடியது. இப்பொதுக்குழுவில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது .

மாநில தலைவராக சகோ. பீஜே அவர்களும்

மாநில பொதுச்செயலாளராக சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்

மாநில பொருளாளராக சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்

மாநில துணை தலைவராக சகோ. செய்யது இப்ராஹிம் அவர்களும்

மாநில துணை பொதுச்செயலாளராக சகோ. யூசுஃப அவர்களும் தேர்ந்த்டுக்கப்பட்டுள்ளனர்..

Saturday, April 13, 2013

ஜித்தா சனாயா கிளை (பாச்சி கம்பெனி) பயான் நிகழ்ச்சி

ஜித்தா சனாயா கிளை (பாச்சி கம்பெனி) பயான் நிகழ்ச்சி 

அல்லாஹ்வின் அருளால், 12-04-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலத்தின் சனாயா கிளை சார்பில் வாராந்திர பயான் நிகழ்ச்சி பாச்சி கம்பெனியில் நடைபெற்றது. கிளை தலைவர் அப்துல்ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சகோதரர் முஜாஹித் "மனிதகுலத்திற்கு இஸ்லாம் வழங்கிய நன்மைகள்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் பாட்சி கம்பெனி பகுதி சகோதரர்கள் உற்சாத்துடன் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ். 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம்



இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை! - மதினா கிளை பயான்

இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை! - மதினா கிளை பயான்

அல்லாஹ்வின் அருளால், 12-04-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலத்தின் மதினா நகர கிளை சார்பில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் சகோதரர் ஜியாவுர் ரஹ்மான் "இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் நகர கிளை சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ். 


மக்கா நகர் கிளை- கடையநல்லூர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை மர்கஸ்
விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல யான்பு சகோதரர்கள் வழங்கிய , 7355 ரியாலை ஜித்தா மண்டல செயலாளர்
சகோ.அப்துல் பாரி அவர்களிடம் கடையநல்லூர் கூட்டமைப்பு வழங்கினார்கள்.

பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் நேரடி
ஒளிபரப்பு.....

நாள் : 14.04.13 இன்ஷா அல்லாஹ் இரவு 7மணிக்கு

உரை : பி.ஜைனுல் ஆபிதீன். அவர்கள்.

தலைப்பு : முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய சதி

உரை : கோவை ரஹ்மத்துல்லாஹ் .அவர்கள்.

தலைப்பு : மதங்களைக் கடந்த மனிதநேயம்
TNTJ Web TV
TNTJ வி்ன் வெப்டிவி தற்போது Live WebTv ஆக மாற்றப்பட்டுள்ளது. தினமும் 4
மணி நேர நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். ஆன்ட்ராய், ஐபோன்,
மொபைல் உள்ளிட்ட டிவிவைஸ்களிலும் வெப்டிவியை காணலாம். கண்டு பயன்
பெறுங்கள்!

Thursday, April 11, 2013

அந்தப் பழைய காலுறை...என்னோடு வரவேண்டும்..!!

அந்தப் பழைய காலுறை...
என்னோடு வரவேண்டும்..!!

அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார்.
தன் மகனை அருகழைத்தார்.

மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான்
உங்களனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி
சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை
நிறைவேற்றுவாயா?"

"என்னவென்று சொல்லுங்கள் தந்தையே!" என்றான் மகன்.

அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய
துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என்
கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை"

ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான
கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும்
ஒப்புக் கொண்டான்.

அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும்
விட்டுவிட்டு மாண்டுப் போனார். அவரை உலகிலிருந்து விடை கொடுத்து அனுப்ப
உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர். உடல் குளிப்பாட்டப்பட்டது.
பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது. அப்போது மகனுக்கு
தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டிய
வரிடம் சென்று தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து "இதனை என் தந்தையின்
கால்களில்
அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும்" என்று கூறினான்,

"முடியாது; முடியவே முடியாது" மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர்.
"இல்லை, இது என் தந்தையின் ஆசை; நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்" என்று
சொல்லிப் பார்த்தான் மகன். ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை.
"இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை; எனவே, வாய்ப்பில்லை!" என்றார் உறுதியாக.

மகனோ மீண்டும் மீண்டும்
கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். "நான்
சொன்னது, சொன்னது தான். வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை;
தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும்
சொல்வார்கள்". அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க
அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் "ஆமாம்!
ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை
தான்!"

இக் களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர்,
அந்த மகனை நெருங்கினார். "தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும்
வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம்
என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று
நினைக்கிறேன்" என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

இறந்த அறிஞரின்
நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப்
படித்தான்மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"என் மகனே! அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து
விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக் களிலிருந்து ஒரே
ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை;
நாளை இந்த நிலை உனக்கும் வரலாம்.
இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும்
தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை நீ நேர்வழியில் ஈட்டி,
நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா;
அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும் உதவும். ஆகவே, இந்தச்
செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப்
பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும்
வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!"

அந்த நிமிடம் வரை உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவமோ மமதையோ சடசடவென எரிந்து
பொசுங்குவதைப் போன்ற உணர்வுடன் கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை
உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.

'(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.' என்கிறது
(திருக்குர்ஆன் 7:8)

'அல்லாஹ்வின்
திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.' (திருக்குர்ஆன் 9:72)

Wednesday, April 10, 2013

சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள "விதிமுறை மீறல் & அபராதங்களின் பட்டியல்"

சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 
"விதிமுறை மீறல் & அபராதங்களின் பட்டியல்" 
(08.04.2013 தேதிப்படி) வெளியிட்டுள்ளது அதனை 
இங்கு பதிவிட்டு உள்ளோம் பார்க்கும் சகோதரர்கள் 
பிறருக்கும் கொண்டு செல்லுங்கள்.....( நன்றி : ரியாத் ஃபெய்ஸல் )

1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (எக்ஸ்பைரி தேதி) 3 நாட்கள் முன்னதாக, இக்காமாவை புதுப்பிக்க (ரெனிவ் செய்ய) சமர்ப்பிக்க வேண்டும்.

மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்

2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது, தகுந்த காரணங்கள் அன்றியே அல்லாமல், காண்பிக்க வேண்டும்

மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்

3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால், முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்

4. இக்காமா தொலைந்து விட்டால், தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்

5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ, பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.

மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.

6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ரா/ஹஜ் விசாவில் வருபவர்கள், அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன், சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும், உம்ரா/ஹஜ் விசாவில் வந்தவர்கள், மக்கா, ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.

மீறினால்: சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும், யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.

7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.

மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் "வெளிநாட்டவராக" (இக்காமா வைத்திருப்பவர் - Expatriate) இருந்தால், அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்

8. இக்காமா / விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல், இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது, விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.

மீறினால்: SR 10000 அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.

9. ஹஜ்/உம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது, அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்,

மீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும், சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ, அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.

10. தன்னுடைய கஃபீல் / நிறுவனத்திற்கு வேலை செய்யாமல், பிற கஃபீல்/நிறுவனம்/சொந்த தொழில் செய்வது - பணி புரிவது குற்றம். மேலும், தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி, தற்போது பணிபுரியும் நிறுவத்தில் "கஃபாலத் - ஸ்பான்ஸர்ஷிப்" மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.

மீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது

11. தொழிலாளியின் கஃபீல் / நிறுவனத்தில் வேலை செய்யாமல், தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.

மீறினால்: SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்

12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு, தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும், அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.

மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை - SR 5000 அபராதம் & ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை - SR 20000 அபராதம் & இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை - SR 50000 அபராதம் & மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும், சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.

13. இக்காமா இல்லாதவர்களையோ, இக்காமா காலாவதி ஆனவர்களையோ, விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.

மீறினால்: முதல் முறை - SR 10000 அபராதம் & ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை - SR 20000 அபராதம் & மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை - SR 30000 அபராதம் & ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும், இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்,

மீறினால்: SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.

15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.

மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை

16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்...

ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால், கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.

17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி, எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில், அவருடைய கஃபீல்/நிறுவனம் புகார் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்

இணையதளம்: www.moi.gov.sa/auth/portal/passports/home -> Click "Violations & Penalties"