Saturday, November 7, 2009

ஜித்தாவில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

வல்ல நாயன் கிருபையால் கடந்த 11-11-2009 அன்று மக்ரிப் முதல் இஷா வரை, ஜித்தா மண்டலம் சார்பில் ஜித்தாவில், ஸாகர் பகுதியில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் சகோ. எம்.எஸ் சுலைமான் (TNTJ மேலாண்மைக்குழு உறுப்பினர்) அவர்கள் கலந்து கொண்டு, மறுமையின் சிந்தனைகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் அதிகமான பெண்கள் பிள்ளைகளுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்;.

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

 ஜித்தாவில்
வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 06-11-09 அன்று ஜித்தா மண்டல ஏற்பாட்டில் ஜித்தா கிலோ14, இஸ்லாமிய அழைப்பு மையத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் முதல் அமர்வில் சகோ. பஷீர் மௌலவி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் வியாபாரம் எனும் தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சகோ. அப்துல் மஜீது ஸஹ்வி அவர்கள் குர்பானியின் சட்டங்கள் குறித்து உரையாற்றினார். இரண்டாம் அமர்வில் சகோ. சைபுல்லாஹ் அவர்கள் குர்ஆன் உருவாக்கிய சமுதாயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 300க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.