Thursday, September 29, 2011

பாலினத்தில் மூளைக்கும் பங்கு உண்டு

       அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஆன்லைன் பீஜே இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை   http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/moolaikum_pangu_undu/

பாலினத்தில் மூளைக்கும் பங்கு உண்டு

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் தொடர்பன உறுப்புகளிலும் செயல்பாடுகளிலும் மட்டுமே வேறுபாடுகள் உள்ளன. மற்ற விஷயங்களில் ஆணும் பெண்ணும் சமமே என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.

இந்தக் கருத்து முற்றிலும் சரியானதல்ல. பாலியல் தொடர்பான உறுப்புக்களில் மட்டுமின்றி மூளை, சிந்தனை, ஆற்றல் உள்ளிட்ட அநேக விஷயங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அநேக வேறுபாடுகள் உள்ளன என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தை மெய்ப்படுத்தும் சான்றுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

இது "THE HINDU" பத்திரிக்கையில் செப்டம்பர் 18 - 2011 அன்று 6 - வது பக்கத்தில் வெளிவந்த கட்டுரை

ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது.

உடற்கூறு கட்டமைப்பு ரீதியான வித்தியாசங்கள் பிறப்பிலேயே உள்ளது - பேராசிரியர் காஃபி

  ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது எனக் கூறுகிறார் அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி. 

சென்னையில் M.V. அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் "பாலினத்தின் பாத்திரம் (Role fo sexes)" என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார். 

அதில் அவர்

ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கின்றனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார். 

உடல் கட்டமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் ஆண், பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன. மூளையின் அளவிலும், மூளையின் உட்பொருள்களான செர்ப்ரோஸ்பினல் ஃபுளூயிடின் (serebrospinal  fiuid) அளவு, வெள்ளை பருப்பொருள் (white matter), சாம்பல் பருப்பொருள்களின் அளவு (gray matter) வரை ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன. 

இந்த உடல் கட்டமைப்பு ரீதியான வேறுபாடு பிறப்பிலே தோன்றுகின்றது. ஆனால் இந்த வேறுபாடு வளர வளர மாறுபடுகின்றதா?, அல்லது அதே நிலையில் நீடிக்கிறதா? 

இது வரை இந்தக் கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் மனிதனின் வளர்ச்சிக்கும் வயதுக்கும் ஏற்ப மூளைகளில் மாறுபாடுகள் தோன்றுகின்றன என்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது வெளிவரத் தொடங்கி உள்ளன என்று கூறுகின்றார் பேராசிரியர் காஃபி.

9 வயதில் மூளையின் வெளிப் பகுதியை மூடி இருக்கும் கோர்டெக்ஸ் (cortex) எனும் பொருள் பெண் மூளையை விட ஆண் மூளையில் பெரியதாக இருக்கின்றது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 19 வயதில் இந்த வேறுபாடுகள் மாற்றம் அடைகின்றன. 

இந்த வேறுபாடுகள் ஆண், பெண் என்ற பாலினத்தைப் பொருத்து மாறுபடுகின்றது.  ஆண் மூளை "முன் மடலின் (frontal lobe)"  தடிமன் பெண் மூளையை விட  வேகமாக குறைகின்றது.  ஆனால் மூளையின் "பின்பக்கப் பகுதி (posterior region )" இதற்கு நேர்மாற்றமாக உள்ளது,  அதாவது பெண் மூளை பின்பக்க பகுதியின் (posterior region)  தடிமன் ஆண் மூளையை விட  வேகமாகக் குறைகின்றது.

சில வருடங்கள் தொடர்ந்து மூளையைப் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்ததில் அது ஒரே மாதிரி இருப்பதில்லை, மூளையில் மேல குறிப்பிடபட்ட பகுதிகள் வயதுக்கு ஏற்ப மாற்றம் அடைகின்றன என காஃபி விளக்குகின்றார். 

30 வயதுக்கு மேல் மனிதனுக்கு வயது கூட கூட மூளையின் கட்டமைப்பு சுருங்குகின்றது.

நரம்பியல் மற்றும் உளவியலோடு பாலினத்திற்குத் தொடர்பு இருக்கின்றது என்றால் அப்பொழுது கண்டிப்பாக மூளையிலும் வேறுபாடு இருக்கும் என்று குறிப்பிட்டார்  பேராசிரியர் காஃபி.  

அவர் மேலும் கூறுகையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மொழிச் செயல்பாடுகளிலும் (language function), 

காட்சி இடம்சார் செயல்பாடுகளிலும் (visual-spatial function),

சமூக அறிவாற்றல்  திறனிலும் (social cognition skills),

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதிலும் (empathy) ,

உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் (emotion and perception)

தேடுவது (seeking) பரபரப்பு  (sensation) போன்ற பண்பிலும்

கண்டிப்பாக வேறுபாடுகள் உள்ளன. 

பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும், ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.

ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும், பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வெவ்வேறாக உள்ளது. 

இந்த உடல்கூறு ரீதியான வேறுபாடு ஆண், பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம், சமூகத்தில் ஆண்கள், தேடக் கூடியவர்களாகவும் (hunter), அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தையைச் சுமக்கக் கூடியவர்களாகவும், கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் எனப் பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்.

இருந்தாலும் இந்த வேறுபாடுகள் நம்மை வகைப்படுத்தி வரையறுக்கின்றதா? "ஆம் இந்த உடல்கூறு ரீதியான வேறுபாடுகள் நம்மை (ஆண், பெண் என) மட்டும் தான் வேறுபடுத்துகின்றது. தனிப்பட்ட மனிதன் அவனுடைய சிறப்பான மாறுபட்ட திறமைகளை வைத்து வேறுபடலாம். எது எப்படி இருந்தாலும் "உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், இந்த ஆண் பெண் உடல் ரீதியான வேறுபாடுகளில் நாம் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறி முடிக்கின்றார் அமெரிக்கப் பேராசிரியர் காஃபி.




Wednesday, September 28, 2011

மாணர்வகளின் சுமையை குறைக்க புதிய க்ரேடிங் முறை

2012-13ம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

பள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு, நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை விவரம் வருமாறு:-

தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை.

அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3-ம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.

55 முதல் 60 மார்க் வரை – ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)

49 முதல் 54 வரை – ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)

43 முதல் 48 வரை – பி 1 கிரேடு (பாயிண்ட் 8)

37 முதல் 42 வரை – பி 2 கிரேடு (பாயிண்ட் 7)

31 முதல் 36 வரை – சி 1 கிரேடு (பாயிண்ட் 6)

25 முதல் 30 வரை – சி 2 கிரேடு (பாயிண்ட் 5)

19 முதல் 24 வரை – டி கிரேடு (பாயிண்ட் 4)

13 முதல் 18 வரை – இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)

12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் – இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)

மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்பட வேண்டும். ஒரு பருவத்தில் எடுக்கப்படும் பாடங்கள் அடுத்த பருவத்திற்கு வராது. இதனால், ஆண்டு தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். இதுபோல, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் கல்லூரிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையையே அறிமுகப்படுத்தலாம்.

நிபுணர் குழு அளித்த மேற்கண்ட பரிந்துரைகளை ஆராய்ந்த அரசு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2013-14) 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறையை கொண்டுவர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் இருப்பதைப் போல அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ தேர்வு முறை (டிரெமஸ்டர் சிஸ்டம்) நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் நிகழ்ச்சி - மதீனா

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்கள், மண்டல, கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷாஅல்லாஹ் வரும் 07-10-2011 வெள்ளி அன்று மதியம் சௌதி நேரம் 2.30 முதல் 4 மணி வரை சகோ. பி.ஜெ அவர்கள் ஆன்லைன் மூலம் மதீனா கிளைக்காக கடல் கடந்தவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள், இது ஆன்லைன் பி.ஜெ இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. இதனை நீங்கள் பார்ப்பதுடன், உங்கள் கிளை மூலம் கூட்டாக அனைவரும் பார்க்கவும் ஏற்பாடு செய்து கொடுத்து அனைவரும் பயனடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா - சௌதி அரேபியா



           


Friday, September 23, 2011

TNTJ-கிளைகளே உஷார்.........

சைபுல்லா ஹாஜா "கஸ்ரத்" &கோ,அவர்களின் "சித்து வேலை "ஆரம்பம்!!

நேற்றைய தினம் (19-09-2011) மாலை எனக்கு ஒரு போன் வருகிறது! 
* யாரு.. ? மஹ்ளரியா..?
* ஆமாம் ! நீங்க யாரு..?
* நான் சைபுல்லாஹ் ஹாஜா அண்ணன் "சேகுதுமான்" பேசுகிறேன்!
(இவரை எனக்கு நன்றாகத் தெரியும்! நான் ,பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் (ஆரம்பத்தில் tntj பள்ளியாக செயல் பட்டது,தற்போது சைபுல்லா குரூப் இல் ஐக்கியமாகி விட்டது)பணி புரியும்போது அப்போது கடையநல்லூர் ல் செயல் பட்ட "இஸ்லாமியக் கல்லூரி"க்காக இவரிடம் அங்குள்ள கொள்கைச் சகோதரர்களிடமிருந்து, பல்லாயிரக் கணக்கில் இவரிடம் வசூல் செய்து கொடுத்தேன்! அந்த விசுவாசத்தில் என்னைத் தொடர்பு கொள்கிறார்!)
* சரி! சந்தோஷம் ! என்ன விஷயம் ..? என்று கேட்டேன்!
* (அவர் சொன்னார்) நாம் (சைபுல்லாஹ் ஹாஜா,சேகுதுமான்) சென்ற வாரம்! லெப்பைகுடிக்காடு சென்றிருந்தோம்! அப்போது! பொதக்குடியும் (நான் பணிபுரியும் ஊர்) ட்ரஸ்ட் ஆகி விட்டது! என்று தகவல் வந்தது! அதனால்..நாமெல்லாம் ஒருங்கிணைந்து செயல் படலாம் என்பதற்காக கேட்டேன்! என்று சொன்னார்! (இவர்களுக்குத் தெரியாது,அதே சென்ற வாரம் ! நான் லெப்பைகுடிக்காடு tntj மர்கசில் ஜும்ஆ உரை நிகழ்த்தியதும்,இரவு தெருமுனைக் கூட்டத்தில் சைபுல்லா குரூப்இன் வண்டவாளங்களை தோலுரித்ததும் இவர்களுக்குத் தெரியாது)
* நான் சொன்னேன் ட்ரஸ்ட் என்பதற்கே இங்கு (பொதக்குடி)வேலை இல்லை!முழுக்க,முழுக்க tntj மாநில தலைமையின் வழிகாட்டுதலின் படிதான் செயல்படுகிறது,இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து அப்படித்தான் செயல் படும் என்று சொன்னேன்!

* அப்படியா..? என்று ஏக்கத்தோடு கேட்டவர்! (ஒரு மீன் வலையில் விழாமல் தப்பி விட்டதே! என்ற ஏமாற்றத்தில்) அடுத்த நொடி, வேறு எந்தக் கேள்வியும் கேட்காமலே தொடர்பை துண்டித்து விட்டார்! 

சகோதரர்களே! எச்சரிக்கை! உங்கள் கிளைகளை உஷார் படுத்துங்கள்! அயோக்கியர்கள் (தங்கள் வலையில் ஏதாவது மீன் சிக்குமா..? அதன் மூலம் இன்னும் எவ்வளவு சுருட்ட முடியுமோ,அந்தளவு சுருட்டலாம் என்பதற்காக வலம் வருகிறார்கள்!)

Thursday, September 15, 2011

ஜித்தா மண்டல ஃபித்ரா முழு விவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் சார்பாக இந்த ஆண்டு ஃபித்ரா தொகை ரூபாய் 800000 (எட்டு லட்சம்) தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
கிளைகள் வாரியாக அதன் விபரம் பின் வருமாறு:
1 Madina 50795
2 Makkah 58928
3 Taif 12048
4 Tabuk 58012
5 Yanbu 49301
6 Al Baha 11506
7 NAJRAN 13169
A செனைய்யா 144759
B Sarafiay Branch 110072
C Sea Port & Balad 110470
D அல் சலாமா 63241
E சுலைமானியா 31687
F கடையநல்லூர் 32542
G மேலப்பாளையம் கிளை 33795
H பொது 17012
I அப்ஹா 2663
மொத்தம் 800000 ரூபாய்

Tuesday, September 13, 2011

ஜித்தா மண்டல தலைவர் சகோ. நௌஷாத், மலேஷியா மண்டல நிர்வாகிகளுடன் சந்திப்பு


அல்லாஹ்வின் திருப்பெயரால்,,,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


 கடந்த 07-09-2011 -புதன் இரவு அன்று, மலேஷியா  சென்றிருந்த 
ஜித்தா மண்டல தலைவர் சகோ. நௌஷாத்,மலேஷியா மண்டல                                 நிர்வாகிகளை சந்தித்தார்கள். மலேஷியா மண்டல பொருளாளர் 
சகோ. அய்யுப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 
இரு மண்டலத்திலும் நடைபெறும் பணிகள் பற்றியும், மாநில நிர்வாகத்திற்க்கு அளித்து வரும் பங்களிப்பு பற்றியும், இனி எவ்வாறு செயல்பாடுகளை அமைத்து கொள்வது எப்படி என்பது பற்றியும்,    உறுப்பினர்களை எப்படி அதிகப்படுத்துவது என்றும், பெண்கள்    தாஃவாவை  எப்படி அமைத்துக் கொள்வது என்றும்,  நிர்வாக   செலவுகள் மற்றும் மாநிலத்திற்க்கு அளிக்கும் பங்களிப்புகளுக்கு   நிதி திரட்டுவது  எப்படி என்பது பற்றியும், விரிவாக 
விவாதிக்கப்பட்டது. இரவு 9.30 மணிக்கு தொடங்கப்பட்ட கூட்டம் 
சுமார் 1 மணிக்கு து. மற்றும் இரவு  உணவுடன் இனிதே 
நிறைவேறியது  அல்ஹம்துலில்லாஹ்

ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 9.9.211 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இது கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து துணைத் தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் ரமலானில் நாம் கற்றுதும் பெற்றதும் என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.







இந்த வருடம் பி்த்ரா வசூல் செய்ததில் ஜித்தா மண்டலத்தில் முதலாவதாக விளங்கும் இந்த கிளையின் தொகை ஃபித்ரா 12015 ரியால்   ஜக்காத் 430 ரியால் என்ற கணக்கும், ஜித்தா மண்டல கணக்கும் அறிவிக்கப்பட்டது. தொடந்து இது நம்ம நேரம் என்று தலைப்பில் இந்த ரமலானில் தங்களது செயல்பாடுகள், பெருநாளின் ஒவ்வொரின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது. துஆவுடம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்து லில்லாஹ்.


Tuesday, September 6, 2011

ஷவ்வால் நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இணைப்பை பார்வையிடவும்.

நன்றி.


Monday, September 5, 2011

இப்படியும் உங்களால் உதவ முடியும்


முதியோர்விதவைகணவனால் கைவிடப்பட்டோர் உட்படமாதாந்திர ஓய்வூதியத் தொகை வேண்டி விண்ணப்பிப்பவர்கள்இனிசம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,விடமே மனு அளிக்கலாம். அந்த மனு மீது விசாரணை நடத்தி, 30 நாளில் உத்தரவு வழங்கதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

முதியோர் ஓய்வூதியத்தொகை உட்பட அரசின் மாதாந்திர ஓய்வூதியத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள்சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாருக்கு முகவரியிட்டுஅந்த மனுக்களை சம்பந்தப்பட்டவி.ஏ.ஓ.,விடம்திங்கட்கிழமைதோறும் அளிக்கலாம்.ஓய்வூதியம் கோரும் மனுவை பெற்றுக் கொண்டுஉரிய படிவத்தில் வி.ஏ.ஓ.ஒப்புகைச் சான்று அளிப்பார். கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் கிராமங்களுக்குசெவ்வாய்க்கிழமை தோறும் அலுவலகத்தில்அமர்ந்துவி.ஏ.ஓ.மனு வாங்கிஒப்புகைச் சீட்டு வழங்குவார்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திஅந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையன்றுதமது அறிக்கையுடன்சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரிடம் ஒப்படைப்பார். அந்த மனுக்கள் மீது தாசில்தார்மண்டல துணை தாசில்தார்ஆர்.ஐ.ஆகியோர் குழுவாக செயல்பட்டுஅரசின் மாதாந்திர ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக ஆய்வு செய்து, 30 நாளில் ஆணைகள் வழங்க வேண்டும். இத்திட்டத்தில்இடைத்தரகர்கள் யாரேனும் குறுக்கீடு செய்தால்அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், ""மனு அளிக்கும் முதியோரிடம் தேவையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூடஇந்த உதவித்தொகையால் தான்அவர்கள் உயிர் வாழ முடியும் என்று அதிகாரிகள் முடிவு செய்தால்அவர்களிடம் ஆவணங்கள் கேட்டு அலைக்கழிக்காமல்உடனடியாக உத்தரவு வழங்கும்படி அரசு தெரிவித்துள்ளது. இதனால்முதியோர் அலைக்கழிப்பு குறையும். பொதுமக்கள் இந்த நடைமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றனர்.

Sunday, September 4, 2011

ஜித்தா மண்டல இஃப்தார் நிகழ்ச்சி 2011











அல்லாஹ்வின் திருப்பெயரால்


28-08-2011 வெள்ளியன்று ஜித்தா மண்டலத்தின் இஃப்த்தார் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. சகோ,முஹம்மது உவைஸ் அவர்கள் ரமாலான் நம்மை பன்படுத்தியதா? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.  600 மேற்பட்ட சகோதர, சகோதரிகள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ரியாத் ரஃப்வா ஜாலியாத் இலவசமாக வெளியிட்ட, சகோ. பி.ஜெ அவர்கள் எழுதிய வரும்முன் உரைத்த இஸ்லாம் என்ற புத்தகம் வருகை தந்த அனைவருக்கும் இலவசமாக வழங்கப் பட்டது.

அனைத்து கிளை சகோதரர்களும் மிகஆர்வமுடன் பங்கேற்று தங்களின் பங்களிப்பை வழங்கியதை கலந்து கொண்ட அனைவரும் பாராட்டிணர். இறுதியாக துஆவுடன் நிகழ்சி இனிதே நிறைவு பெற்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.