Showing posts with label யான்பு கிளை. Show all posts
Showing posts with label யான்பு கிளை. Show all posts

Saturday, February 16, 2013

TNTJ ஜித்தா-யான்பு கிளையின் கடையநல்லூர் பள்ளிக்கான நன்கொடை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை நிர்வாகிகள் ஜித்தா மண்டலம் யான்பு கிளை நிர்வாகிகளை தொடர்புகொண்டு தங்களின் பள்ளியின் கட்டுமான தேவைக்கு உதவிடுமாறு வேண்டுகோள் வைத்ததை அடுத்து யான்பு கிளையின் சார்பாக இந்திய ரூபாய் சுமார் 17000 தொகை அளவிற்கு 1200 சௌதி ரியால் ஜித்தா மண்டல தலைமையின் வழியாக 16-02-2013 சனி அன்று அனுப்பி கடையநல்லூர் மக்கா நகர் கிளைக்கு வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, February 2, 2013

TNTJ ஜித்தா-யான்பு கிளையின் இரத்ததான முகாம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் 01.02.2013 வெள்ளியன்று காலை இரத்த தான முகாம் சிறப்பாக நடந்தது அதில் ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர் அதில் முப்பது சகோதரர்கள் குருதி கொடையளித்தனர். 80ற்க்கும் மேற்பட்ட சகோதரர்கள் வரதயாராக இருந்தும் மருத்துவமனையில் 30 யூனிட்டிற்க்குமேல் ரத்தம் சேமித்துவைத்திருக்கும் வசதி இல்லாமையல் 50பேர்களை அழைத்து அவர்களில் 30 பேர்களுகளிடம் இருந்துமட்டும் இரத்தம் பெறப்பட்டது. குருதி கொடையளித்த அனைவருக்கும் ஜூஸ் மற்றும் பழம், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.


Thursday, January 17, 2013

TNTJ ஜித்தா-யான்பு கிளை ரத்ததான முகாம் அழைப்பு

உதிரம் பகிர்வோம், உயிரை காப்போம். SHARE BLOOD, SAVE LIFE.

அன்புடன் அழைக்கின்றது.
யான்பு கிளை.
ஜித்தா மண்டலம்.

Wednesday, January 2, 2013

TNTJ ஜித்தா யான்பு கிளையில் மார்க்க உரை


அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளை சார்பாக கடந்த 31.12.12 திங்கள் அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடந்தது அதில் தாயகத்திலிருந்து வருகை தந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத்தலைவர் சகோ. எம்ஐ.சுலைமான் அவர்கள் 'உலகம் போற்றும் உன்னத மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயகத்தில் செய்துவரும் அரும்பணிகள் குறித்து சில நிமிடங்கள் மிகசிறப்பாக எடுத்துரைத்தார்கள் இந்நிகழ்ச்சியில் சகோதர்கள் கலந்து பயனடைந்தனர். துஆவுடன் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


Saturday, November 24, 2012

ஜித்தா-யான்பு கிளையில் ஆன்லைன் பயான் மற்றும் இஃப்தார்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-11-202 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் ஆன்லைன் பயான் மற்றும் அஷூரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ. முஹம்மது ஒலி அவர்கள் "மக்களை நேசித்த தலைவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், பிறகு அஷூரா 9ம் நாள் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்டவர்களுக்கு சகோ. பி.ஜெ அவர்கள் ஆற்றிய மனித குல வழிகாட்டி நபிகள் ஸல் அவர்கள் என்ற டி.வி.டி இருபதும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Friday, August 3, 2012

ஜித்தா-யான்பு கிளையில் இஃப்தார் மற்றும் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் 01.08.2012 புதன் அன்று இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். ஆன்லைன் மூலம் ரியாத் மண்டல பேச்சாளர் சகோ.செய்து பைஜி அவர்கள் உரையாற்றினார்கள்.
து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். 


Monday, July 16, 2012

ஜித்தா-யான்பு கிளையின் பாலக்கோடு பள்ளிக்கான பங்களிப்பு

அல்லாஹிவின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டல யான்பு கிளை, ஜித்தா மண்டலம் பாலக்கோடு பள்ளிக்காக ஒப்புக்கொண்டிருக்கும் 50000 ரூபாயில் தனது பங்களிப்பாக 7000 ரூபாயை கடந்த 11-07-2012 புதன் அன்று ஜித்தா மண்டல து.செயலாளர் சகோ. அன்சாரியிடம் ஒப்படைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, March 17, 2012

ஜித்தா மண்டல-யான்பு கிளை தலைமை கட்டிட நிதி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மாநில தலைமை நிதியை ஜித்தா மண்டலம் உறுப்பினர்களிடமிருந்தும், கிளைகளிடமிருந்தும் திரட்டி வருகின்றது. அந்த வகையில் யான்பு கிளைக்கு நிர்ணயித்த 30000 ரூபாய்க்கான தொகையின் கிளை பொருளாளர் கடந்த 11-03-2012 அன்று கிளை செயலாளரிடம் அளித்து அதனை மண்டல தலைமை மூலம் மாநிலத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.