Thursday, July 26, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இப்தார் மற்றும் பயான்(6ம் நாள்)

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 25/07/2012 செவ்வாய் அன்று ரமளான் பிறை 6ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி"  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 6ம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்களுடன்புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய பிலிபைன்ஸ் சகோதரர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டு பயனடந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment