Wednesday, July 25, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இப்தார் மற்றும் பயான்(நாள்-5)

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 24/07/2012 செவ்வாய் அன்று ரமளான் பிறை 5ஆம் நாள் இஃப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று, உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 5ம் பாகத்தை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்தும் ஏராளமான சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment