Monday, July 23, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இப்தார் மற்றும் பயான்(நாள்-3)

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 22/07/2012 ஞாயிற்றுக்கிழமை அன்று ரமளான் பிறை மூன்றாம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் பயான் நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று, அழகிய முறையில் உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமழானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 3ம் பாகத்தினை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்தும் ஏராளமான சகோதரர்கள் திரளாக இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டு மனநிறைவோடு சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment