Saturday, July 7, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 06/07/2012 வெள்ளி அன்று  ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்" என்ற தலைப்பில்: வரலாற்று குறிப்புகளுடன் சிறப்பான முறையில் எடுத்துதைத்தார். மேலும் கிளைச் செயலாளர் சகோ, நிஜாம் அவர்கள் "நாட்டு நடப்பும் நமது நிலையும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ, முஜாஹீத் அவர்கள் "இஸ்லாத்தின் கடவுள் கொள்கை" என்ற தலைப்பிலும், சகோ, முஹம்மது சாலிஹ் அவர்கள் "புறம்பேசுவதை தவிர்ப்போம்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். 
இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆ வுடன், மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment