Friday, July 27, 2012

ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளை மர்கஸில் 27-07-2012 வெள்ளி அன்று ஜூ.ம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இறையச்சம் (கை) கூடியதா?” என்ற தலைப்பில், நோன்பின் தாத்பரியத்தையும், அதை கடமையாக்கிய அல்லாஹ்வின் நோக்கத்தையும் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும்,  கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் உறுதி ஏற்போம் என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்  பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment