Saturday, July 7, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய மேல்பட்டாம்பாக்கம் பாபு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 05/07/2012 வியாழன் அன்று தபூக் STC(சௌதி டெலிபோன் கம்பெனி)யில் Generator Operator ஆக பணிபுரியும் மேல்பட்டாம்பாக்கம் சகோதரர் பாபு அவர்கள் TNTJ தபூக் கிளை மர்கஸில் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். கிருஸ்துவ மதத்தை சேர்ந்த இவருக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இயேசு இறைமகன் இல்லை என்பதையும், பைபில் இறைவேதம் இல்லை என்பதையும், பைபிலில் கிருத்துவ பாதிரிமார்களின் சித்துவிளையாட்டுக்களையும் ஆதாரப்பூர்வமாக விளக்கிக்கூறி  இயேசு அவர்கள் இறைத்தூதர் தான் என்பதையும் பைபிலின் ஆதாரத்துடன் அறிவுப்பூர்மாக எடுத்துக்கூறி தூயஇஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களையும், வணக்க வழிபாடு சம்மந்தமான விஷயங்களையும் விளக்கிக் கூறி கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்கள். மேலும் அவர் தனது பெயரை அப்துற் ரஹ்மான் என்றும் மாற்றிக்கொண்டார். அல் ஹம்து லில்லாஹ். மேலும் அவருக்கு சகோ, P.J அவர்களின் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?,இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை!, நபிவழித் தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், கிருஷ்தவருடன் நடந்த விவாதம், பைபில் இறை வேதமா? குர்ஆன் இறை வேதமா? விவாதம்!, இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர்! அல்ஹம்துலில்லாஹ். 


No comments:

Post a Comment