Saturday, July 21, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 20/07/2012 வெள்ளி அன்று ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "நம் வாழ்வில் மீண்டும் ஒரு ரமளான்" என்ற தலைப்பில், நோன்பின் தாத்பரியத்தையும், அதை கடமையாக்கிய அல்லாஹ்வின் நோக்கத்தையும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "அருள் நிறைந்த ரமளானை அழகிய முறையில் வரவேற்போம்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment