Saturday, July 14, 2012

ஜித்தா செனைய்யா கிளையின் பொதுக்குழு

இணை இல்லா ஏக இறைவனின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையின் பொதுக்குழு 13/07/2012 வெள்ளி அன்று கிளை தலைவர் சகோ.அமீன் தலைமையில் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடை பெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ.லால்பேட்டை பஷீர்  மௌலவி நோன்பின்  சிறப்பு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். பின்பு சகோதரர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்கள். தொடர்ந்து கிளை தலைவர் சகோ.அமீன் கிளையின் ஆறு மாத செயல்பாடுகளை விளக்கினார். வரவு செலவு கணக்குகளை பொருளாளர் சகோ ஷேக் முஹம்மது சமர்ப்பித்தார். வட்டியில்லா கடன் திட்டத்தின் கணக்குகளை கிளைசெயலாளர் சகோ. யாகூப் சமர்ப்பித்தார். தொடர்ந்து மாநில தலைமையில் நடைபெற்ற செயற்குழு பற்றி சுருக்கமாக மண்டல செயலாளர் சகோ.அப்துல் பாரி விளக்கினார். ரமளானில் நடக்க இருக்கும் இப்தார் நிகழ்ச்சி பயான், பித்ரா பற்றியும் அதற்க்கு குழுவும் நியமிக்கப்பட்டது.  ஆர்வமுடன் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். துஅ வுடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment