Saturday, April 21, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில், 20/04/2012 வெள்ளி அன்று  ஜூம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர்   சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  இஸ்லாம் கூறும் மனித நேயம் என்ற தலைப்பில் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள்வணக்க வழிபாடுகள் மற்றும் அனைத்து செயல்பாடுகளிலும்  முழுக்க முழுக்க மனிதநேயம் மலிந்து கிடப்பதை குர்ஆன் - ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள்.   மேலும்  கிளைச் செயலாளர் சகோ, நிஜாம் அவர்கள்  தர்மம் தலைக்காக்கும்  என்ற தலைப்பிலும்,   கிளை து.தலைவர்  சகோ. முஜாஹீத் அவர்கள்     மார்க்கத்தின் எச்சரிக்கை என்ற தலைப்பிலும் சிற்றுரை ஆற்றினார்கள்.     இந்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய    ஐந்து   சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.  து.ஆ வுடன் மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்  

No comments:

Post a Comment