Sunday, April 29, 2012

மாற்று மதத்தவர் அழைப்பு பணி

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸிற்க்கு கடந்த  26/04/2012  வியாழன் அன்று மனிதாபிமான உதவி தேடி விழுப்புரம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் வந்தனர். இவர்கள்  கடந்த  பத்து ஆண்டுகளாக தபூக் பலதியா கம்பெனியில் சாலை துப்புரவாளர்களாக பணிபுரிபவர்கள். இவர்களுக்கு இவர்களுடைய கம்பெனி கடந்த ஐந்து ஆண்டுகளாக IQAMA எனும் அடையாள அட்டையை ரினிவல் செய்யாமலும், இவர்களை தாயகத்திற்கு அனுப்பாமலும் மிகுந்த கொடுமை படுத்தியுள்ளது. எனவே இவர்கள் கடந்த  ஓராண்டு காலமாக வேலைக்கு செல்லாமல் தாயகம் செல்லவேண்டும் என்ற இலக்கோடு பல்வேறு முயற்ச்சிகளை செய்து உள்ளனர். ஆனால், எந்த பலனும் அவர்களுக்கு கிடைக்காமல் போகவே, இறுதியாக அவர்கள்  TNTJ தபூக் கிளை நிர்வாகிகளின் உதவி நாடி வந்தனர்.

 அவர்களை கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும்கிளைச் செயலாளர் நிஜாம் அவர்களும் சகோதர வாஞ்சையுடன் வரவேற்றுஉபசரித்து ஆறுதல் கூறியதுடன், Jeddah Indian Consul S.D. Moorthy அவர்களை தொடர்புகொண்டு இவர்களின் அவங்களை எடுத்து கூறினார்கள்.

 

S.D. Moorthy அவர்களும்அவர்களுக்கு ஆறுதல் கூறி, உங்களது மனுவை சகோ. அப்துல் அஜீஸ் அவர்களிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள், விரைவில் நீங்கள் தாயகம் செல்வதற்கான ஏற்பாட்டை செய்கிறோம் என்றார்கள்.

 

மேலும் அவர்களுக்கு கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்களும்கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்களும்  "இஸ்லாத்தின் கடவுள் கொள்கை" என்ன என்பதைப் பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்துஅழகிய முறையில் இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தார்கள்.  மேலும் அவர்களுக்கு சகோ. P.J  அவர்களின் தர்ஜுமாவும், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை மற்றும் பல இஸ்லாமிய 15 நூல்களையும்.  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம்கிறுஸ்தவர்களுடன் நடந்த விவாதம்பைபில் இறை வேதமாவிவாதம், இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள் ஆகிய தலைப்புகளின் 25  DVD  களையும் வழங்கி அவர்களுடைய கோரிக்கைகளை இன்ஷா அல்லாஹ்  விரைவில் முடித்து தருவதாக கூறி அனுப்பி வைத்தனர்அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment