Friday, April 13, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்



அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 13/04/2012 வெள்ளி அன்று ஜும் ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தொழுகையை தோழமையாக்குவோம் என்ற தலைப்பில் தொழுகை நமது அனைத்து தீய காரிங்களை விட்டும் தடுக்கும் கேடயம் என்பதை குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் அல் குர்ஆனும் அறிவியலும் என்ற தலைப்பிலும், கிளை து.தலைவர் சகோ.முஜாஹீத் அவர்கள் படிப்பினைகள் என்ற தலைப்பிலும் சகோ. முஹம்மது சாலிஹ் அவர்கள் ஷைத்தானை முறியடிப்போம் என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய 2 பிலிப்பைன்ஸ் சகோதரர்கள் உள்பட 50 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். துஆவுடன் மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 



No comments:

Post a Comment