Saturday, April 14, 2012

சுன்னத் நோன்பு அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இந்தக் கடிதம் உங்களை பூரண உடல் நலத்தோடும் சீரிய இஸ்லாமிய சிந்த்னையோடும் சந்திக்கட்டுமாக. இன்ஷாஅல்லாஹ் வரும் 19-04-2012 வியாழன் அன்று சுன்னத்தான நோன்புகளை நாம் வழக்கில் கொண்டு வர ஆர்வமூட்டும் வகையில் ஜித்தா மண்டலம் வியாழன் அன்று ஆர்வமுள்ளவர்கள் இணைந்து நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்யவுள்ளது. ஆர்வமும், வசதியும் உள்ளவர்கள் புதன் அன்று இரவு ஸகர் செய்து, வியாழன் நோன்பு வைத்து, வியாழன் மாலை மண்டல இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். இடம் பின்பு அறிவிக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் முன்பே தெரிவித்துவிட்டால் இஃப்தார் ஏற்பாட்டிற்க்கு வசதியாக இருக்கும், எனவே கீழ்வரும் எண்களில் தொடர்பு கொண்டு உங்களின் வருகையை உறுதி செய்யவும்.

முஹம்மது ரஃபீ (மண்டல து. தலைவர்)-----------0557968391
முஸ்தஃபா------------------------------------------------------------0567140437

ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழைமகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனேவ நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகின்றேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)
திர்மிதீ 678 

இப்படிக்கு,
ஜித்தா மண்டல நிர்வாகிகள்,
ஜித்தா



No comments:

Post a Comment