Tuesday, April 17, 2012

ஜித்தா மண்டல செனைய்யா கிளையின்

அல்லாஹ்வின் மாபெரும் கிபருபையால் 13-04-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையின் மாதாந்திர யான் நிகழ்ச்சி மற்றும் கிளைக்கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைச்செயலாளர் சகோ. இர்ஃபான் "நரகத்தின் நெருப்பு" என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் நரகநெருப்பின் ஆழம், அதற்கு உரியவர்கள் யார் யார், அது எப்படி இருக்கும் என்று குர்ஆன்,ஹதீஸின் ஆதாரங்களுடன் விளக்கினார். தொடர்ந்து மண்டல தலைமையின் நிர்வாகக்குழுவின் செயல்திட்டங்கள் பற்றிய செய்தியினை சகோ.அப்துல் ஹலீம் சித்திக் வாசித்தார்கள். மாநிலதலைமை கட்டிடத்திற்கு இடம் வாங்குவதற்கான வசூல் பற்றியும், மண்டல தலைமை நிர்ணயித்த தொகையை வசூலை எட்டிய விபரமும் கிளைத்தலைவர் மூலம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேச்சுப்பயிற்சியில் கலந்துகொண்ட பேச்சாளர்கள், சகோ.அப்துல் அஜீஸ், அப்துல் ரஹீம், முகம்மது மைதீன் ஆகியோர் சிறிய தலைப்புகளில் சிற்றுரை நிகழ்த்தினார்கள். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment