Friday, April 13, 2012

ஜித்தா-சுலைமானியா கிளை பொதுக்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டல சுலைமானியா கிளை பொதுக்குழு ஜித்தா மண்டல தலைவர் சகோ.நௌஷாத் தலைமையில் 12-04-2012 வியாழன் இரவு 9 மணிக்கு கூடியது. இதில் ஷர்ஃபியா கிளைத்தலைவர் சகோ. முஸ்தபா அவர்கள் நிர்வாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின் சகோ.நௌஷாத் அவர்கள் நிர்வாகிகளின் பொறுப்புகளைப்பற்றி விவரித்தார்கள். அதன்பின் மண்டல து.செயலாளர் சகோ.ஹக்கீம் அவர்கள் கிளை நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள். மண்டல து.செயலாளர் சகோ.முனாப் அவர்கள் செயல்பாடுகளை எவ்வாறு அமைத்துக்கொள்ளலாம் என்று ஆலோசனைகளை வழங்கினார்கள். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment