Sunday, March 11, 2012

TNTJ ஜித்தா மண்டல தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 09-03-2012 வெள்ளி அன்று  ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.                               

இதில் TNTJ ஜித்தாஹ் மண்டலத் தலைவர் சகோ, நவ்ஷாத் அலி அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் குறித்தும், TNTJ மாநில,   மற்றும் ஜித்தாஹ் மண்டல வீரியமிக்க செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

பின்பு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ், அவர்கள் முஸ்லீம் என்றால் யார்? பகுதி-3  என்ற தலைப்பில் முஸ்லீம்களின் பண்புகளையும், நடைமுறைகளையும் சான்றுகளுடன் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

மேலும் கிளைச் செயலாளர் சகோ, நிஜாம் அவர்கள் "மறுமை வெற்றி யாருக்கு? பகுதி-4 என்ற தலைப்பிலும், கிளைத் துணைத் தலைவர் சகோ, முஜாஹீத் அவர்கள் "நபிவழி திருமணம்! பகுதி-4" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள்.  
40 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். துஆவுடன், மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment