Saturday, March 3, 2012

மக்கா கிளை மசூரா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-03-2012 வெள்ளி அன்று மாலை 6 மணிக்கு ஜித்தா மண்டல மக்கா கிளை மசூரா கிளை தலைவர் சகோ. அப்துற் ரஹ்மான் தலைமையில் நடந்தது. மண்டல தலைவர் சகோ. நௌஷாத் அவர்கள், கிளை செயல்பட வேண்டிய அவசியத்தையும், ஜித்தா மண்டலம் செய்துவரும் பணிகளையும், அளித்து வரும் பங்களிப்புகள் பற்றியும் விவரித்தார். இனி மக்கா கிளை வாரம்தோறும் மார்க்க பணிகள் செய்த விபரத்தை போட்டோவுடன் அனுப்பி வைப்பதென்றும், பங்களிப்புகள் அதிகரிப்பது பற்றி ஆய்ந்து தெரிவிப்பது என்றும், இன்ஷா அல்லாஹ் வரும் 08-03-2012 வியாழன் இரவு மக்கா பொதுக்குழு கூட்டி புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment