Saturday, March 17, 2012

TNTJ ஜித்தா மண்டல தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 16/03/2012 வெள்ளி அன்று  ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ், அவர்கள்தனி மனித வழிபாடு! என்ற தலைப்பில் வணக்கம் என்றால் என்னவென்று தெரியாமல் முஸ்லீம்கள் தனி மனிதர்களை எப்படியெல்லாம் வழிபடுகின்றனர்? என்ற நடைமுறைகளையும் சான்றுகளுடன் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
மேலும் கிளைச் செயலாளர் சகோ, நிஜாம் அவர்கள் "மறுமை வெற்றி யாருக்கு? பகுதி-5 என்ற தலைப்பிலும், கிளைத் துனைத் தலைவர் சகோ, முஜாஹீத் அவர்கள், ஏகத்துவத்தின் தன்மைகள் என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள்.  
இன்நிகழ்ச்சியிள் 4 மாற்று மத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்துஆவுடன், மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.  


No comments:

Post a Comment