Saturday, March 17, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் அழகிய கடனுதவி திட்டம்

அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? என்ற இறை வசனத்திற்கு ஒப்பாக அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில், கடந்த 01/03/2012 அன்று அழகிய வட்டியில்லா  கடன்  உதவி திட்டம் துவங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

இதில் 30 நபர்களிடம் தலா 100 SR மதந்தோரும் வசூலிக்கப்பட்டு 1 நபருக்கு 2000 ரியால் வட்டியில்லா கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடனைப் பெற்றுக்கொண்ட நபர் 5 மாதங்களில் வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்திவிட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் முதலாவதாக 2000/SR அழகிய கடனாக பெரியப்பட்டிணம் இஸ்மாயில் (வெள்ளை ஆடை & தொப்பி அணிந்திருப்பவர்) அவர்கள் பெற்றுக் கொண்டார்.

"அல்லாஹ்வுக்கு யாரேனும் அழகிய கடன் வழங்கினால் அதை அவருக்கு அவன் பன்மடங்காக வழங்குவான். அவருக்கு மகத்தான கூலியும் உண்டு". [அல் குர்ஆன்-57: 11]        

No comments:

Post a Comment