Saturday, March 10, 2012

ஷகாகாவில் ஜித்தா மண்டல புதிய கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 08-03-2012 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பின் ஜித்தாவிலிருந்து 1600 கி.மீ தொலைவிலுள்ள அல்-ஜவ்ஃப் மாவட்டத்தில் உள்ள ஷகாகா நகரில் சகோ. உபைதுற் ரஹ்மான் முயற்ச்சியால் அங்குள்ள தவ்ஹீத் சகோதரர்களை இணைத்து, ஒரு புதிய கிளை அமைக்கப்பட்டது. ஷிகாகா நகரில் இருந்து சுமார் 20 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் ஜித்தா மண்டல தலைவர் சகோ.நௌஷாத், தபூக் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ், தபூக் கிளை பொருளாளர் சகோ. சஃபியுத்தீன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். சகோ. அப்துல் அஜீஸ் தவ்ஹீத் ஜமாத் 4 முனைகளாக தன் செயல்பாடுகளை எப்படி அமைத்துக்கொண்டுள்ளது என்றும் அது போல் புதிய கிளை எப்படி செயல் படவேண்டும் என்றும் விரிவாக விளக்கி கூறினார்கள். சகோ. நௌஷாத் தவ்ஹீத் ஜமாத் ஆற்றி வரும் சமுதாய சேவைகள் பற்றியும், ஜித்தா மண்டலம் செய்து வரும் பணிகள் பற்றியும், வழங்கிவரும் பங்களிப்புகள் பற்றியும் சுருக்கமாக விவரித்தார்கள். இதன் பின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

தலைவர்:-       சகோ.இம்தாதுல்லாஹ் - களமருதூர்(விழுப்புரம்) - 0559427419.
செயலாளர்:-    சகோ. இஸ்மாயில் - சேலம் - 0509698596
பொருளாளர்:-  சகோ. அப்துல்லா - கட்டிமேடு - 0543363750
து.தலைவர்:-    சகோ. சாதிக் - ஆலங்குடி - 0551060644
து.செயலாளர்:- சகோ.பஷீர் - கோவை - 0509031130

இவர்களும் அமைப்பாளர்களாக 

சகோ. A.K உபைதுர் ரஹ்மான் - தோப்புத்துறை - 0509276937
சகோ. அப்துற் ரஹ்மான் - சிவகங்கை - 0500487515

ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வந்திருந்த அனைவருக்கும் ஜமாத்தின் பைலா நகல் வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும், தாங்கள் செய்ல்படுவது மட்டுமின்றி சுற்றுபுறத்தில் உள்ள சிறிய ஊர்களிலும் கிளைகளை உருவாக்கி செயல்பாடுகளை அதிகமாக்குவோம் என்று கூறி, ஆர்வத்துடன் தங்களது செயல்பாட்டினை தொடங்குவாதாக கூறினார்கள்.




No comments:

Post a Comment