Tuesday, November 20, 2012

ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா  மண்டலம் தபூக் கிளை  மர்கஸில் 16-11-2012 வெள்ளி அன்று ஜும்.ஆவிற்கு  பிறகு  வாராந்திர மார்க்க  சொற்பொழிவு  நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "முஹரமும் முஸ்லீம்களும்"  என்ற தலைப்பில் முஹரம் மாதத்தின் உண்மை நிலையையும், அதையொட்டி திரிக்க பட்ட பொய்களையும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள். மேலும்  கிளைச் செயலாளர் சகோ. நிஜாம்  " நாட்டு நடப்பும், நமது நிலையும்" என்ற தலைப்பிலும்,  கிளை  பொருளாளர்  சகோ.  முஜாஹீத்  "மூமின்களின்  பண்புகள்"  என்ற தலைப்பிலும்  மிகச்சிறப்பாக சிற்றுரையற்றினார்கள்இந்நிகழ்ச்சியில் 45திற்கும்  மேற்பட்ட  சகோதரர்கள்  கலந்துக்கொண்டனர்.  நபிவழி து.ஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி  நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment