Saturday, November 17, 2012

ஜித்தா-செனைய்யா கிளை இலவச ரத்த பரிசோதனை முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-11-2012 வெள்ளி அன்று காலை 08 முதல் 11 மணி வரை ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையில் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் கண்டறியும் இலவச முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில் சுமார் 8 பேர்களுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருப்பதும், மேலும் சிலருக்கு உயர் ரத்த அழுத்தமும், தாழ்வு ரத்த அழுத்தம் உள்ளதை கண்டறிந்து அவர்களுக்கு தக்க மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் இந்தியாவின் பல மாநிலத்தவர்கள் கலந்து கொண்டதோடு, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, சோமாலியா நாடுகளை சேர்ந்த பல மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு முஹம்மது யார் இவர் என்ற பிரசுரம் வழங்கப்பட்டது. மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு தூய இஸ்லாத்தை எத்திவைக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இருவருக்கு 10 இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டு தாஃவா செய்யப்பட்டது. இதுபோன்ற முகாம்களை அவ்வப்பொழுது நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். செனைய்யா கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்ததோடு, வந்திருத்த அனைவரையும் இன்முகத்தோடு உபசரித்தனர். மண்டல நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment