Saturday, November 17, 2012

ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோ.ரவி

சௌதி அரேபியாவின் ஹாலத் ஹம்மார் பகுதியில் ஆட்டுப்பண்ணையில் பணிபுரியும் புதுகோட்டை மாவட்டம் ந்தாங்கியைச் சேர்ந்த சகோ. ரவி அவர்கள் கடந்த 09/11/2012 அன்று கடுமையான கடுமையான வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருந்ததை கண்ட அங்குள்ள அரபிகள் அவரை தபூக் King Fahad Hospitalலில் சேர்த்துவிட்டனர். அங்கு பணிபுரியும் நமது கொள்கை சகோதரர்களில் சிலர் இச்செய்தியை கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களுக்கு தெரியப்படுத்தினர். உடனடியாக அவர் மருத்துவமனை சென்று அவரை சந்தித்து ஆறுதல்கூறி அருகில் இருந்து அனைத்துவித சோதனைக்கு பிறகு அவருக்கு Appendix Operation உடனடியாக செய்யவேண்டும் என தெரியவந்தது.  அதற்க்கான ஏற்பாடு செய்யப்பட்டு, அல்லாஹ்வின் பேரருளால் அவருக்கு ஆபரேஷன் நல்ல முறையில் நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
 
அதன் பிறகு அவரை கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து அவருக்கு ஓரிறைக்கொள்கையை எடுத்துக்கூறி, முக்கிய நூல்களையும் வழங்கி இஸ்லத்தின்பால் அழைப்பு விடுத்தார். அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 16/11/2012 வெள்ளியன்று அவர் இஸ்லாத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்களும், கிளை செயலாளர் நிஜாம் அவர்களும் கொள்கை விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிகூறி, கலீமாவையும் சொல்லிக் கொடுத்தனர்.
 
அவர் தனது பெயரை முஹம்மது அலீ என்றும் மாற்றிக்கொண்டார். இறுதியில் அவருக்கு சகோ. P.J அவர்களின் தமிழாக்கம்பல தலைப்புகளில் இஸ்லாமிய நூல்கள் 15யும். 25 DVD களையும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment