Saturday, November 24, 2012

ஜித்தா-யான்பு கிளையில் ஆன்லைன் பயான் மற்றும் இஃப்தார்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-11-202 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் ஆன்லைன் பயான் மற்றும் அஷூரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ. முஹம்மது ஒலி அவர்கள் "மக்களை நேசித்த தலைவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், பிறகு அஷூரா 9ம் நாள் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்டவர்களுக்கு சகோ. பி.ஜெ அவர்கள் ஆற்றிய மனித குல வழிகாட்டி நபிகள் ஸல் அவர்கள் என்ற டி.வி.டி இருபதும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment