Sunday, October 7, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 04-10-2012 வியாழன் அன்று இரவு 12 மணி அளவில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் ஜித்தாஹ் மண்டலத் தலைவர் நவ்ஷாத் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தை  துவக்கிவைத்துப் பேசிய சகோ. நவ்ஷாத் அலி அவர்கள், தற்பொழுது வாங்கப்பட்டுள்ள மாநில தலைமையகக் கட்டிட நிதி தொடர்பாகவும், தான் நேரில் சென்று பார்த்து வந்த சுவாமிமலை சிறார்ர் ஆதரவு இல்லம் தொடர்பாகவும் விரிவாவாக எடுத்து கூறினார். மேலும் ஜித்தாஹ் மண்டலம் மற்றும் கிளைகளின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாவாக எடுத்து கூறினார். அடுத்து பேசிய கிளைச் செயளாலர் நிஜாம் அவர்கள்  மாதாந்திர வரவு,  செலவு கணக்குகளை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டிதெளிவுபடுத்தி கருத்துரை வழங்கினார்.பின்னர் கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள்,  ஆதரவாளர்கள் என அனைவருடைய கருத்துக்கள்,  ஆலோசனைகள் அனைத்தையும் பரிசிலிக்கப்பட்டன.
இறுதியாக கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்,  "நன்மையின் பக்கம் விரைவோம்" என்ற தலைப்பில், கிளையின் நற்பணிகள் எவ்வாரெல்லாம் அமைய வேண்டும் என்றும், அதற்கான அறிவு திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?  என்பதையும், நன்மைகளையும் மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்மேலும் தபூக் கிளையின் தனி நபர் அழைப்பு பணிகள்பிற மத சகோதர, சகோதரிகளுக்கான அழைப்பு பணிகள் இன்னும் வீரியமாக அமைய தேவையான ஆலோசனைகளையும் கொள்கை சகோதரர்களுக்கு வழங்கப்பட்டதுதுஆவுடன், இரவு உணவிற்குப் பின் நிகழ்ச்சி  நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்
 

No comments:

Post a Comment