Sunday, October 7, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 05-10-2012 வெள்ளி அன்று  ஜூம்.ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்துப் பேசிய TNTJ ஜித்தாஹ் மண்டலத் தலைவர் சகோ. நவ்ஷாத் அலி அவர்கள்: தற்பொழுது வாங்கப்பட்டுள்ள மாநில தலைமையகக் கட்டிட நிதி தொடர்பாகவும்தான் நேரில் சென்று பார்த்து வந்த சுவாமிமலை – சிறார் ஆதரவு இல்லம் தொடர்பாகவும் விரிவாவாக எடுத்துக்கூறினார். மேலும் ஜித்தாஹ் மண்டலம் மற்றும் கிளைகளின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாவாக எடுத்துக்கூறினார்.
 
அடுத்துப் பேசிய கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்  "இஸ்லாத்தின் எல்லைகளை மீறாதீர்என்ற தலைப்பில்: நமது அன்றாட வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும்என்பன போன்ற விஷயங்களை குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
 
மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நபிமார்ளும், எதிப்பாளர்களும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் "மூமின்கள்கள் யார்?" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி துஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment