Saturday, October 6, 2012

TNTJ ஜித்தா மண்டல ரத்ததான முகாம்



அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 05-10-2012 வெள்ளி அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலத்தின் சார்பில் மாபெரும் இரத்த தான முகாம், கிங் பஹத் மருத்துவமனை இரத்த வங்கியில் நடைபெற்றது. அதில் 100க்கும் அதிகமான சகோதரா்கள் (பெண்கள் உட்பட) இரத்த தானம் கொடுக்க முன்வந்தும், மருத்துவமனை ஊழியா்களால் சுமார் 70க்கும் மேற்பட்டவா்களிடம் மட்டுமே பெற முடிந்தது. குறைவான காலம் என்பதாலும், அதற்கான வசதிகள் குறைவாக இருந்ததாலும் தாங்களால் பெற இயலவில்லை என்பதையும் நமது நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். மேலும் அடுத்த சந்தர்ப்பத்தில் இன்னும் அதிகமாக இரத்தம் எடுக்க ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்தனர். அனைத்து சகோதரா்களுக்கும் சான்றிதழ் வழங்குவோம் என்றும் கூறினர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment