Saturday, October 13, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்கிளை மர்கஸில் 12-10-12 வெள்ளி அன்று  ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "நபி வழியில் நம் ஹஜ்என்ற தலைப்பில், நமது ஹஜ்ஜின் நோக்கம், அதன் செயல்முறைகள் எவ்வாறு அமையவேண்டும்என்பன போன்ற விஷயங்களை குர்ஆன்ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "இறைத்தூதர்களும், எதிப்பாளர்களும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் "மூமின்கள்கள் யார்?" என்ற தலைப்பிலும் மிகச்சிறப்பாக சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி துஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment