Saturday, June 23, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 22/06/2012 வெள்ளி அன்று ஜூம்.ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "அழைப்புப்பணியில் இபுராஹீம் [அலை] அவர்களின் முன்மாதிரி?!" என்ற தலைப்பில்: சத்திய மார்க்கத்தின்பால் மக்களை அழைப்பதின் அவசியத்தையும், அதில் இபுராஹீம் [அலை] அவர்களின் அழைப்புப்பணி எவ்வாறு அமைந்திருந்தது என்பதையும் மிகத் தெளிவானமுறையில் குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.
மேலும் கிளைச் செயலாளர் சகோ, நிஜாம் அவர்கள் "நாட்டு நடப்பும் நமது நிலையும்" என்ற தலைப்பிலும், கிளை து, தலைவர் சகோ, முஜாஹீத் அவர்கள் "இஸ்லாத்தை வெரும் சடங்காக பின்பற்றும் முஸ்லீம்கள்" என்ற தலைப்பிலும், சகோ, முஹம்மது சாலிஹ் அவர்கள் "புறம்பேசுவதை தவிற்ப்போம்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். 
இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆவுடன், மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment