Saturday, June 30, 2012

ஜித்தா- செனைய்யா கிளையில் உருது பயான்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளையில் 29/06/2012 வெள்ளி அன்று இரவு பிற மாநில சகோதரர்களுக்காக உருது பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. உலகளாவில் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல கிளைகள் உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் குர்ஆனையும், ஆதாரப்பூர்வ ஹதீஸையும் மூலமாக கொண்டு சத்தியப்பிரச்சாரம் ஒருபுறம் நடந்து வருகிறது. தற்போது தமிழை மொழியல்லாது பிறமொழியிலும் அங்காகங்கே கிளைகளில் பரவலாக பிரச்சாரம் செய்து வருவது போல் நமது கிளையிலும் உருது பயான் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஜித்தா மண்டல பேச்சாளர் சகோ. சௌக்கத் ஹூசைன் அவர்கள் அல்குர்ஆன் வல்ஹதீஸ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உருதுமொழி பேசும் வடமாநில மற்றும் பாகிஸ்தான் சகோதர்ரகளும் கலந்து கொண்டார்கள். அவர்கள் கேள்வியும் கேட்டு சந்தேகளை தீர்த்துக் கொண்டார்கள். அல்ஹம்து லில்லாஹ்.

No comments:

Post a Comment