Saturday, June 23, 2012

ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளைஆன்லைன் பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-06-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலமும், ஷர்ஃபியா கிளையும் இணைந்து நடத்திய ஆன்லைன் பயான் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோ. அப்துந் நாசர் அவர்கள் இஸ்லாத்தின் போர்களும், பாஸிஸத்தின் அக்கப்போர்களும் என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் நிறைவு செய்ய முடியாததால், இன்ஷா அல்லாஹ் வரும் 06-07-2012 அன்று இதன் இரண்டாம் பாக உரையை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 75 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment