Sunday, June 3, 2012

TNTJ ஜித்தாஹ் மண்டலம்தபூக் கிளை மர்கஸில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்தபூக் கிளை மர்கஸில்
01/06/2012 வெள்ளி அன்று ஜூம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் " இறுதி மூச்சு ஈமானுடன் " என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ.நிஜாம் அவர்கள் "நாட்டு நடப்பும் நமது நிலையும்" பாகம் 4 என்ற தலைப்பிலும், கிளை து.தலைவர் சகோ. முஜாஹீத் அவர்கள் "நபிகளாரின் நற்குணங்கள்" பாகம் 3 என்ற
தலைப்பிலும், சகோ. முஹம்மது சாலிஹ் அவர்கள் "புலம்பலும் சந்தோசமும் " என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆவுடன் மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment