Friday, June 15, 2012

ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் பொதுக்குழு கூட்டம்

அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் 15 / 06 / 2012 வியாழன் அன்று  இரவு 12 மணிக்கு கிளை பொதுக்குழு ஜித்தா மண்டல தலைவர் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவை நடத்த ஷகாகாவிலிருந்து 450 கி.மீ தூரத்தில் உள்ள தபூக் கிளை தலைவர் அப்துல் அஜீஸ் மற்றும் கிளை செயலாளர் நிஜாம் இருவரையும் ஜித்தா மண்டலம் நிர்ணயித்திருந்தது. அதனடிப்படையில் அவர்கள் இந்த கூட்டத்தை நடத்தி வைத்தனர்.


முதலில் கிளை செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சகோ.  நிஜாம்  TNTJ அரும்பணிகள் குறித்தும் நாம் ஏன் TNTJஇணைய வேணடும், என்று விளக்கி உரை நிகழ்த்தினார்கள்.அதை தொடர்ந்து சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக கிளைத்தலைவர் இம்தாத் அவர்களின் பதவி விலகல் கடித்தை ஏற்று கொண்டதோடு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நாகையை சேர்ந்த முஹம்மத் அன்வர்தீன் [0555194812] அவர்கள் ஏகமனதாக  புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிளை அமைப்பாளர்  சகோ உபைதுர் ரஹ்மான்  அவர்களின் நன்றி உரையோடு   இரவு  1:30 மனியளவில் நிகழ்ச்சி  இனிதே  நிறைவடைந்தது.  அல்ஹம்துலில்லாஹ்.