Saturday, March 9, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய இரு இலங்கையர்கள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் இரு இலங்கை சகோதரர்கள் தூய இஸ்லாத்தை தழுவினார்கள். அதன் விபரம் வருமாறு. இலங்கை பொளநர்வெயைச்சேர்ந்த இந்திக்கா, பிரசன்னா என்ற இரு புத்த மதத்தை சேர்ந்த சிங்கள சகோதரர்கள் (நீல நிற டி.சர்ட், & வெள்ளை, பச்சை ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் அணிந்திருப்பவர்கள்) தபூக்கிலுள்ள தஸ்ஹிலாத் பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்கள். அவர்களிடம் நமது கொள்கை சகோதரர்கள் செய்துவந்த அழைப்பின் பேரில் 08-03-2013 வெள்ளி அன்று அந்த இரு சகோதரர்களும் நமது மர்கஸில் தூய இஸ்லாத்தை தழுவினார்கள். அவர்கள் தங்களது பெயர்களை இஸ்மாயில்(இத்திகா), இத்ரீஸ்(பிரசன்னா) என்றும் மாற்றிக்கொண்டார்கள். இவர்களுக்கு கிளை சார்பாக சிங்கள புத்தகங்கள், மற்றும் ஆடியோ கேஸட்டுகள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு மார்க்கத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்து இஸ்லாத்தை எத்திவைக்க உதவியவர் கடந்த வருடம் நமது மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற சகோ. ஷாக்கீர் என்பது குறிப்பிடதக்கது. எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே.

No comments:

Post a Comment