Friday, March 1, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா - தபூக் கிளையில் 01-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் மார்க்கமும் மானிடமும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும் நமது நிலையும் என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹித் அவர்கள் புறம் பேசுவதை தவிர்ப்போம் என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது ரஃபீக் எது நேர்வழி என்ற தலைப்பிலும் சிற்றுரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment