Tuesday, March 5, 2013

அருள் மறையில் அறிவியல்

இறை வேதம் என்பதற்கான அறிவியல் சான்றுகள்:-

1 - பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது - 2:22, 21:32, 40:64, 52:5

2 - பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு - 86:11

3 - மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன - 4:56

4 - விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் - 6:125

5 - பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும் - 2:36, 7:24, 7:25

6 - ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவிஈர்ப்பு விசையே காரணம் - 16:79, 67:19

7 -விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது - 17:37

8 - பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம் - 18:90

9 - பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் - 20:53, 43:10, 78:6

10 - பெருவெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு - 21:30

11 - கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் - 23:14

12 - நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது - 23:18

13 - கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது - 25:53, 27:61, 35:12 55:19,20

14 - காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் - 34:12

15 - வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி - 35:41,13:2, 31:10, 22:65


16 - பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் - 37:5, 55:17, 70:40

17 - பெருவெடிப்புக்குப் பின் தூசுப்படலத்திலிருந்து கோள்கள் உருவாயின - 41:11.

18 - மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடையை எடுத்துக் கொள்கின்றன - 6:98, 50:4, 71:17

19 - விண்வெளிப் பயணம் சாத்தியமே - 55:33-35

20 - விரல்ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம் - 75:4

21 - உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு - 76:2

22 - தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, வயிற்றிலிருந்து வெளியாகின்றது - 16:69

23 - கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன - 24:40

24 - அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும் குறிப்பிட்ட காலம்வரை ஏற்றுக் கொள்ளும் - 13:8

25 - பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில்தான் உள்ளன - 96:15

26 - காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்து உயிரினங்களையும் அழித்து விடும் - 51:41,42

27 - கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை - 28:32

28 - விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை - 86:7

29 - வான்வெளியிலும் பாதைகள் உண்டு - 51:7

30 - பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது - 13:2, 31:10

31 - சூரியனும் கோள்களும் ஓடுகின்றன - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5

32 - சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது - 54:2

33 - வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது - 51:47

34 - உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49

35 - உலக வெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும் - 13:41, 21:44


36 - வான்மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் - 24:43

37 - அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் - 105:1-5, 11:82, 15:74,26:173, 27:58, 51:32

38 - "இருள்கள்' என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலைநீளம் உண்டு என்பதையும், நிறத்திற்கு நிறம் அலைநீளம் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளது. - 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11

39 - பொருட்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றிய முன்னறிவிப்பு- 2:259

40 - குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியது - 19:21, 19:29,30, 21:91, 23:50

41 - ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் - 88:17, 36:41,42

42 - இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது - 57:25

43 - படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன - 13:3, 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27. 78:7, 79:32

44 - பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துதல். - 41:9,10

45 - நவீனக் கருவிகளும் ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில், பாலூட்டி உயிரினங்களிடம் பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை - 16:66

46 - மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை - 22:31

47 - வருடத்திற்கு எத்தனை மாதங்கள் என்பது நெறிமுறைப்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் 12 மாதங்கள்தான் என்று அறிவித்தது - 9:36

48 - கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம் - 3:153

49 - மரபணுக்கள் வழிவழியாக தொடரும் - 7:172

50 - சென்ற நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரிலேடிவிடி (Relativity) எனும் சார்பியல் கோட்பாடு - 22:47, 32:5

51 - மனிதன் குரங்கில் இருந்து படைக்கப்படவில்லை - 2:30, 3:59, 4:1, 6:2, 6:98, 7:189, 15:26, 15:28, 22:5, 23:12, 30:20, 32:7, 35:11, 37:11, 38:71, 39:6, 40:67, 49:13, 55:14

52 - மனிதர்களை மூக்கு தான் சரியாக அடையாளம் காட்டும் - 68:16

53 - பூமி பல அடுக்குகளைக் கொண்டது என்பதை துரப்பணக் கருவிகள் இல்லாத காலத்தில் கூறிய திருக்குர்ஆன் - 65:12

54 - தண்ணீருக்குள் பிரசவம் நடப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது - 19:24

55 - குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்களின் உயிரணுக்களே - 75:39 


மாஷா அல்லாஹ். சொன்னவைகளும், அறிந்தைவைகளும் சொற்பமே, சொல்லாதவைகளையும், அறியாதவைகளையும் அறிய வைப்பவனாக அல்லாவ்ஹே இருக்கின்றான்.

No comments:

Post a Comment