Thursday, August 9, 2012

ஜித்தா மண்டல மாற்று மதத்தவருக்கான அழைப்பு பணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-08-2012 புதன் அன்று ஜித்தா மண்டல நிர்வாகி சகோ. சித்தீக் அவர்கள் வீட்டில் மாற்று மதத்தவர்களுக்கான தாஃவா மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 6 மாற்று மதங்களை சேர்ந்த பொறியாளர்கள் கலந்து கொண்டனர். சகோ.சௌக்கத் ஹுசைன் அவர்கள் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை, மற்றும் இறைவனின் பண்புகளை விளக்கி உரையாற்றினார்கள். பின்பு மாற்று மத சகோதரர்களின் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்கள். இறுதியில் அவர்களுக்கு 5 தமிழாக்க குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது(ஒருவர் ஆந்திராவை சேர்தவர் ஆதலால் அவருக்கு ஆங்கில குர்ஆன் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது). மண்டல நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர். து.ஆ விற்க்குப்பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment