Saturday, August 4, 2012

ஜித்தா-தபூக் கிளை செயற்க்குழு கூட்டம்

TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் மாதாந்திர ஆலோசனை கூட்டம் கடந்த 02/08/2012 வியாழன் அன்று இரவு 01 மணி அளவில் கிளை செயலாளர் நிஜாம் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் நிஜாம் அவர்கள் மாதாந்திர வரவு, செலவு கணக்குகளை கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டி,  தெளிவு படுத்தினார்கள். பின்னர் கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள்,  ஆதரவாளர்கள் என அனைவருடைய கருத்துக்கள்,  ஆலோசனைகள் அனைத்தையும் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக  கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்: "நன்மையின் பக்கம் விரைவோம்"  என்ற தலைப்பில், கிளையின் நற்பணிகள் எவ்வாரெல்லாம் அமைய வேண்டும்  என்றும்,  அதற்கான அறிவு திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?  என்பதையும்,  நன்மைகளையும் தெளிவாக எடுத்துரைத்தார்.  மேலும்  தபூக் கிளையின் மீதமுள்ள ரமளான் மாத செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும்,  தபூக் கிளை மர்கஸில் [இப்தார்] நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அழகாக செய்து கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி கூறி பாராட்டினார். ஈதுல் பித்ரா வசூல் சம்பந்தமாவும் அதற்கான பொறுப்பாளிகளை ஏகமணதாக முடிவு செய்யப்பட்டது.  மேலும் ரமழானில் தனி நபர் அழைப்பு பணிகள், பிற மத சகோதர,  சகோதரிகளுக்கான அழைப்பு பணிகள் இன்னும் வீரியமாக அமைய தேவையான ஆலோசனைகளையும் கொள்கை சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது.  இந்த செயற்குழுவில் தபூக் பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.   அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment