Wednesday, August 1, 2012

ஜித்தா-ஷகாகா கிளை சமுதாய பணி

கடந்த 20-07-2012 வெள்ளி அன்று விருதுநகர் மாவட்ட தலைவர் சகோ.அபுபக்கர் சித்தீக் அவர்கள் அல் ஜொவ்ஃப் பகுதியில் ஷாஜஹான் என்கிற கான் முஹம்மது என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும் அவரது உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்கள். உடன் ஷகாகா கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இடத்திற்க்கு சென்று இறந்தவரின் நண்பர் சகோ. ஜின்னா அவர்களை சந்தித்து விபரம் தருமாறு ஜித்தா மண்டல நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். பின் ரியாத் மண்டலத்தை தொடர்பு கொண்டு இந்திய தூதரகம் மூலம் அடக்கம் செய்வதற்க்கான பேப்பர் வேலைகளை செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டனர், அவர்களும் அதற்க்கு உதவினர். பின்பு இந்தியாவிற்க்கு தொடர்பு கொண்டு பேப்பர் அனுப்புவதை பற்றி விளக்கி அதனையும் பெற்றனர். பின் ஷகாகா கிளையினர் அப்பகுதியில் உள்ள கேரளத்தை சேர்ந்த சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உதவியுடன் 31-07-2012 செவ்வாய் அன்று இரவு இஷாவிற்க்குப்பிறகு இறந்தவர் உடலை நல்லடக்கம் செய்தனர். 

(சம்பவ இடம் சிறு கிராமமாக இருந்ததால், அங்குள்ள முத்தவாக்கள் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை)

No comments:

Post a Comment