Wednesday, August 29, 2012

ஜித்தா-மக்கா கிளையின் மனிதநேய சேவை

கடந்த 21-08-2012 செவ்வாய் அன்று திண்டிவனம் மாவட்ட நிர்வாகி, தங்களது முன்னாள் மாவட்ட து.செயலாளர் சகோ.சித்தீக் பணிக்காக மக்கா வந்த சில நாட்களில் வாகன விபத்தில் சிக்கி மக்காவில் உள்ள கிங்ஃபைசல் மருத்துவமனையில் உள்ளதாகவும், அவருக்கு துணை யாரும் இல்லை என்றும், அவர் மிகவும் பயப்படுவதாகவும், அவரை தாயகத்திற்க்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படியும் மண்டல நிர்வாகிகளை தொடர்பு கொண்டார்கள். உடன் மக்கா கிளை நிர்வாகிகளான அப்துற் ரஹ்மான், மன்சூர், அபுதாஹிர் மூவரையும் தொடர்பு கொண்டு அவரை சென்று பார்த்து விபரம் தருமாறு மண்டல நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். உடன் அவரை சென்று மருத்துவமனையில் அவரை சந்தித்து ஆறுதல் கூறி, அவர் நலமாக உள்ளார் என்ற தகவலை கூறியதுடன் அவரை போட்டோ எடுத்து அவர் வீட்ட்ற்க்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். பின்பும் மாவட்ட நிர்வாகிகள், சித்தீக் தாய் மற்றும் மனைவி மிகவும் பயப்படுவதாக கூறி அவ்ரை தாய்கத்திற்க்கு அனுப்பும்படி கேட்டுகொண்டனர். தொடர்ந்து மக்கா நிர்வாகிகள் சித்தீக்கின் முதலாளியை தொடர்புகொண்டு பேசி அவரை தாயகம் அனுப்ப சம்மதிக்க செய்து விமான டிக்கெட்டையும் அவரே தர சம்மதிக்க செய்து இன்ஷாஅல்லாஹ் வரும் 31-08-202 வெள்ளி அன்று காலை தாயகம் திரும்ப ஏற்பாடு செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment