Saturday, May 5, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை மாதாந்திர மஷுரா கூட்டம்

TNTJ  ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை  மர்கஸில்  மாதாந்திர லோசனை கூட்டம் கடந்த  03/05/2012 வியாழன் அன்று இரவு 11 மணியளவில்  கிளை செயலாளர் நிஜாம் தலைமையில் நடைபெற்றதுஇதில் கிளை செயலாளர் நிஜாம் அவர்கள் மாதாந்திர வரவு,செலவு கணக்குகளை கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டிதெளிவுபடுத்தினார். அல்ஹம்துலில்லாஹ். பின்னர்  கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள்,  ஆதரவாளர்கள் என அனைவருடைய கருத்துக்கள்,  ஆலோசனைகள் அனைத்தையும் பரிசிலிக்கப்பட்டன. இறுதியாக  கிளைத் தலைவர் சகோ,  அப்துல் அஜீஸ் அவர்கள்: "அழைப்பு பணியின் அவசியம்என்ற தலைப்பில், நமது கிளையின் அழைப்பு பணிகள் எவ்வாரெல்லாம் அமைய வேண்டும் என்றும், அதற்கான அறிவு திறனை எவ்வாறு வலர்த்துக் கொள்வது? என்பதையும்அதனால் கிடைக்கவிருக்கம் நன்மைகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்மேலும்  தபூக் கிளையின் செயல் திட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும்என்றும்தனி நபர் அழைப்பு பணிகள்பிற மத சகோதர, சகோதரிகளுக்கான அழைப்பு பணிகள் இன்னும் வீரியமாக அமைய தேவையான ஆலோசனைகளையும் கொள்கை சகோதரர்களுக்கு வழங்கினார்இந்த செயற்குழுவில் தபூக் பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்கள்நிர்வாகிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்மேலும் து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது புத்துணர்ச்சியுடன் கலைந்து சென்றனர்.  அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment