Thursday, May 31, 2012

ஜித்தா-கடையநல்லூர் கிளைஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைமை மற்றும் மண்டலத் தலைமையின் ஆலோசனையின் படியும் அனுமதியின் படியும் நிர்வாகிகள் என்று இருந்த நிலையை மாற்றி பொறுப்பாளர்கள் என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் முறையாக நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக்குழு கூடி மூன்று பொறுப்பாளர்களை ஒரு மனதாகதேர்வு செய்தார்கள். 1.சகோ.அப்துல் ஹலீம் சித்தீக், 2.அப்துல் பாசித், 3.அல் அமீன். இதனை பொதுக்குழு ஒப்புதலுக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடையநல்லூரில் இயங்கிக் கொண்டிருக்கும் கிளைகளின் செயல்பாடுகள் குறித்தும், அவர்கள் மர்கஸ்ஸுக்களுக்கு செய்துள்ள செலவுகள் மற்றும் மருத்துவ உதவி பற்றியும் விவாதிக்கப்பட்டது, து.ஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment