Sunday, May 13, 2012

TNTJ தபூக் கிளை வாராந்திர பயா

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை  மர்கஸில்  11/05/2012  வெள்ளி அன்று  ஜூம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர்   சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்  "சத்திய மார்க்கமும்  தடம்புலும் சமுதாயமும்" என்ற தலைப்பில்:  சத்திய மார்க்கம் என்பது குர்ஆன் ஹதீஸ் மட்டும்தான் என்பதையும், நமது சமுதாயம் எவ்வாறெல்லாம் தடம் புல்கிறது என்பதையும் மிகத் தெளிவான முறையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள்.

மேலும் கிளைச் செயலாளர் சகோ, நிஜாம் அவர்கள்  "நாட்டு நடப்பும் நமது நிலையும்" என்ற தலைப்பிலும், கிளை து,தலைவர் சகோ, முஜாஹீத் அவர்கள்  "நபிகளாரின் நற்குணங்கள்" என்ற தலைப்பிலும், சகோ, முஹம்மது சாலிஹ் அவர்கள்  "திக்ர் மற்றும்  துஆக்களின் சிறப்புகள்"  என்ற தலைப்பிலும் சிற்றுரை ஆற்றினார்கள். ந்நிகழ்ச்சியில் 4  பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். துஆவுடன், மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment