Saturday, February 2, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 01-02-2013 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 மணி வாராந்திர பேச்சுப்பயிற்ச்சி கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. 
அதன்பின் ஜும்.ஆ தொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் மனிதனிடம் மண்டியிட்ட சுயமரியாதை என்ற தலைப்பிலும், கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும் நமது நிலையும் என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹித் சோதனையின்றி சொர்க்கமில்லை என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது ரஃபீ அவர்கள் இறைவனை அஞ்சி வாழ்வோம் அருள் செய்யப்படுவோம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். சுமார் 45 பேர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment